மோடியின் தீவிர ஆதரவாளர்.. குஜராத் பெண்.. பிரிட்டனில் உயரிய பதவிக்கு தேர்வு.. புதிய பிரதமர் அதிரடி!
Recommended Video
லண்டன்: பிரிட்டனின் உள்துறை செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பிரீத்தி பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மோடியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து நேற்று முதல்நாள் தெரசா மே பதவி விலகினார். பிரிக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியவில்லை, அதில் தோல்வி அடைந்துவிட்டார் என்ற காரணத்தால் இவர் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்தது.
இதையடுத்து அவர் நேற்று முதல்நாள் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக தற்போது பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

யார் இவர்
போரிஸ் ஜான்சன் இயல்பாகவே வலதுசாரி கொள்கை கொண்டவர். இவரின் கன்சர்வேட்டிவ் கட்சியில் இருக்கும் மற்ற முக்கிய தலைவர்களை விட இவர் அதிகமாக வலதுசாரி கொள்கை கொண்டவர். இவருக்கும் டிரம்பிற்கும் அத்தனை நெருக்கம். அவரும் வலதுசாரி கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல்தான் இந்திய பிரதமர் மோடியும் வலதுசாரி கொள்கை கொண்டவர் ஆவார்.

மாற்றம்
இந்த நிலையில் பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி ஏற்றதில் இருந்து அங்கு நிறைய மாற்றங்களை அவர் கொண்டு வருகிறார். அரசில் உயர் பதவியில் இருக்கும் இடதுசாரி கொள்கை கொண்டவர்களை அகற்றிவிட்டு வலதுசாரி கொள்கை கொண்டவர்களை பதவியில் அமர்த்தி வருகிறார். இந்த நிலையில் பிரிட்டனின் உள்துறை செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பிரீத்தி பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்முறை
இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்தான் பிரீத்தி பட்டேல். பிரீத்தி பட்டேல் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். எம்பியான இவர், பல்வேறு அமைச்சர் பதவியை வகித்து உள்ளார். ஆனால் இவர் கடந்த ஒன்றரை வருடமாக எந்த பதவியிலும் இல்லை. முன்னாள் பிரதமர் தெரசா மேவிற்கு கீழ் சில முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், அவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.

என்ன ஆதரவு
இவர் மோடியின் தீவிர வலதுசாரி கொள்கைகளுக்கு ஆதரவாக செயல்பட கூடியவர். மோடி பிரதமர் ஆன பின் அதை முதலில் பாராட்டி சந்தோசம் அடைந்தார். இப்போது இன்னொரு வலதுசாரி கொள்கை கொண்ட பிரதமர் ஜான்சனுக்கு கீழ் இந்தியா பிரிட்டன் உறவு அதிக வலிமை பெறும் என்று இவரே கூறியுள்ளார். விரைவில் பிரிட்டன் இந்தியா இரண்டு நாடுகளும் முக்கிய ஒப்பந்தங்களை கையெழுத்திடும் என்று கூறியுள்ளார்.

வாய்ப்புள்ளது
மோரிஸ் ஜான்சன் விரைவில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார். அப்போது ஜான்சனுடன் பிரீத்தி பட்டேல் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து தெரசா மேவை விமர்சித்து வந்த இந்த குஜராத் பெண்ணிற்கு தற்போது பிரிட்டனின் புதிய பிரதமர் ஜான்சன் உயரிய பதவியை வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications