பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்.. யார் இந்த ஆனந்த் குமார் சுந்தர்?
லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் சுயேச்சையாக களமிறங்கி உள்ளார். அவர் போட்டியிடும் தொகுதி என்ன, அங்கு எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்ப்போம்..
உலகையே ஆண்ட பிரிட்டன் நாட்டின் பொதுத் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். முன்னதாக 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அங்கு ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி இருக்கிறது. பிரதமராக ரிஷி சுனக் இருக்கிறார். இந்த கட்சியின் நிர்வாக காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவு பெற உள்ளது..

இதன் காரணமாக பொதுத் தேர்தலானது, 2024 ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ஆனால், பிரிட்டன் பொதுத் தேர்தலானது, வரும் ஜூலை மாதம் 4 ஆம் தேதியே நடத்தப்படும் என பிரதமர் ரிஷி சுனக் கடந்த சில மாதம் முன்பு அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், பிரிட்டனில் பிரிட்டனை பொறுத்தவரை மிக முக்கிய மற்றும் பெரிய கட்சிகளாக கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளிடையே தான் போட்டி. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் இருக்கிறார். தொழிலாளர் கட்சியின் தலைவராக சர் கியர் ஸ்டார்மர் இருக்கிறார். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி வெல்லுமா அல்லது எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெல்லுமா என்பது இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும்.
பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்றத்திற்கு வரும் ஜூலை 4ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 326 தொகுதிகளில் வெல்லும் கட்சி ஆட்சியமைக்கும். அதேநேரம் எந்த கட்சியும் 326 இடங்களில் வெற்றிப்பெறவில்லை என்றால், தொங்கு நாடாளுமன்ற நடைமுறை பிரிட்டனில் பின்பற்றப்படுவது வழக்கம். அதன்படி, பிரதமர் பதவியில் நீடிக்கும் நபருக்கே முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர் மற்ற கட்சிகளுடன் பேசி கூட்டணி ஆட்சியை அமைக்க முயற்சிக்கலாம். அவரால் முடியவில்லை என்றால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கலாம்.
இதில் பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஆனந்த் குமார் சுந்தர் என்பவர் போட்டியிடுகிறார். இங்கு தமிழர்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். அவர்களின் ஆதரவுடன் வெற்றி பெற விரும்பும் ஆனந்த் குமார் சுந்தர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவர், சென்னை கொளத்தூரை பூர்விகமாக கொண்டவர் ஆவார்.
பிரிட்டனின் ஈஸ்ட் ஹாம் தொகுதியில் ஆனந்த் குமார் சுந்தர் மட்டுமல்ல மொத்தம் 7 பேர் போட்டியிடுகிறார்கள்.. ஜூன் 7ம் தேதி வெளியான இறுதி பட்டியலின்படி விவரங்களை பார்ப்போம்.

ஸ்டீபன் டிம்ஸ் (தொழிலாளர் கட்சி)
மரியா ஹிக்சன் (கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிஸ்ட் கட்சி)
ஹிலாரி விக்டோரியா பிரிஃபா (லிபரல் டெமாக்ரட்டீஸ் கட்சி)
தாஹிர் மிர்சா (சுயேச்சை)
டேனியல் சார்லஸ் ஆக்ஸ்லி (சீர்திருத்த யுகே)
ரோஸி பியர்ஸ் (பசுமைக் கட்சி)
சதீஷ் மோகன் ராமதாஸ் (சுயேச்சை)
ஆனந்த் குமார் சுந்தர் (சுயேச்சை)
பிரிட்டனில் அனைத்து வேட்பாளர்களும் தற்போது தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எந்த கட்சி ஆட்சியமைக்கும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications