எப்ஸ்டீன் பைல்ஸ்.. பிரிட்டன் இளவரசர் அதிரடி கைது! சிக்கும் முக்கிய புள்ளிகள்!
லண்டன்: இங்கிலாந்தில், மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய சகோதரரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டைனுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆண்ட்ரூ கடந்த 2001 முதல் 2011 வரை பிரிட்டனின் சிறப்பு வர்த்தக தூதராக இருந்தார். அப்போது ரகசிய அரசு ஆவணங்களை பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் உடன் சட்டவிரோதமாக ஷேர் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா சமீபத்தில் வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் பைல்களில் உள்ள மின்னஞ்சல்கள் மூலம் இந்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
ஆண்ட்ரூ தனது 66 வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பிரிட்டன் சட்டப்படி ஒருவர் கைது செய்யப்பட்டவுடன், அவரது பெயரை போலீசார் அதிகாரப்பூர்வமாக வெளியிட மாட்டார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வரை, அவரின் தனிப்பட்ட கௌரவம் பாதிக்க கூடாது என்பதால் இவ்வாறு செய்யப்படுகிறது.
எனவே போலீசார் தரப்பில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரை, அரசு பதவியில் முறைகேடு செய்ததாக வந்த புகாரின் பேரில் கைது செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பிரிட்டன் ஊடகங்கள் கைது செய்யப்பட்டது ஆண்ட்ரூதான் என்பதை உறுதி செய்துள்ளன.
அரசு பதவியில் இருந்த போது முறைகேடு என்பது பிரிட்டனை பொறுத்தவரை தீவிர கிரிமினல் குற்றமாகும். ஒரு அரசு அதிகாரி, பொதுமக்களின் நம்பிக்கைக்கு துரோகம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே, தவறான காரியத்தை செய்வது, அல்லது கடமையை செய்ய தவறுவது அரசு பதவியில் முறைகேடு செய்ததாக கருதப்படும். இதற்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
தனது தம்பியின் செயல் குறித்து அரசர் மூன்றாம் சார்லஸ், ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். சட்டம் தன் கடமையை செய்யும், போலீசாருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அதேபோல பிரிட்டன் பிரதமர், சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என்றும், யாரும் மேலானவர்கள் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications