பணத்தை தர்றேன்னு சொல்றேன்.. ஆனா வாங்காமா என்னை பிடிப்பதிலேயே குறியா இருக்காங்க… புலம்பும் மல்லையா
லண்டன் : தாம் கொடுக்கும் பணத்தை பெறுவதை விட தம்மை பிடிப்பதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுவதாக வங்கி மோசடி மன்னன் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூபாய் 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடனாக பெற்று விட்டு அதனை திரும்பி செலுத்தாமல் தப்பியோடிய விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

இதுதொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அவரை இந்தியா கொண்டுவர லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இது மல்லையாவுக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந் நிலையில், லண்டனில் இருந்தபடியே தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா வருவதற்கான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் விவாதித்து வருகிறேன். அதற்கான வாய்ப்புகள் இருந்தால் மேல் முறையீடு செய்வேன்.
நான் 2016ம் ஆண்டிலேயே பணத்தை வழங்குவதாக அறிவித்திருந்தேன். ஆனால் பணத்தை அதை வாங்க கூடாதென்று வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. உண்மையிலேயே நான் கொடுக்கும் பணத்தை வாங்குவதற்கு பதிலாக என்னை இந்தியாவுக்கு கொண்டு வருவதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.
இவ்வாறு அந்த பேட்டியில் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
மல்லையா எப்போது இந்தியா அழைத்து வரப்படுவார்?? அவரிடம் இருந்து பணத்தை எப்படி வசூல் செய்ய போகிறார்கள் பொதுமக்கள் நினைத்து கொண்டிருக்க.. அவரோ கொடுத்த பணத்தை மத்திய அரசு வாங்க மறுக்கிறது என்று கூறியிருப்பது, புதிய விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறது.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications