பணத்தை தர்றேன்னு சொல்றேன்.. ஆனா வாங்காமா என்னை பிடிப்பதிலேயே குறியா இருக்காங்க… புலம்பும் மல்லையா
லண்டன் : தாம் கொடுக்கும் பணத்தை பெறுவதை விட தம்மை பிடிப்பதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுவதாக வங்கி மோசடி மன்னன் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூபாய் 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடனாக பெற்று விட்டு அதனை திரும்பி செலுத்தாமல் தப்பியோடிய விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

இதுதொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அவரை இந்தியா கொண்டுவர லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இது மல்லையாவுக்கு பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந் நிலையில், லண்டனில் இருந்தபடியே தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியா வருவதற்கான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் விவாதித்து வருகிறேன். அதற்கான வாய்ப்புகள் இருந்தால் மேல் முறையீடு செய்வேன்.
நான் 2016ம் ஆண்டிலேயே பணத்தை வழங்குவதாக அறிவித்திருந்தேன். ஆனால் பணத்தை அதை வாங்க கூடாதென்று வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. உண்மையிலேயே நான் கொடுக்கும் பணத்தை வாங்குவதற்கு பதிலாக என்னை இந்தியாவுக்கு கொண்டு வருவதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது.
இவ்வாறு அந்த பேட்டியில் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
மல்லையா எப்போது இந்தியா அழைத்து வரப்படுவார்?? அவரிடம் இருந்து பணத்தை எப்படி வசூல் செய்ய போகிறார்கள் பொதுமக்கள் நினைத்து கொண்டிருக்க.. அவரோ கொடுத்த பணத்தை மத்திய அரசு வாங்க மறுக்கிறது என்று கூறியிருப்பது, புதிய விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறது.
-
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications