நீரவ் மோடிக்கு ஜாமீன் அளிக்க முடியாது.. விசாரணைக்கு ஒத்துழையுங்கள்.. லண்டன் கோர்ட் அதிரடி!
லண்டன் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு பெயில் அளிப்பது தொடர்பான வழக்கை இன்று விசாரிக்கிறது.
லண்டன்: நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீரவ் மோடி இந்தியா கொண்டு வரப்படுவாரா என்பது பெரிய விவாதமாக மாறியுள்ளது. நீரவ் மோடி இந்தியா கொண்டு வரப்படும்பட்சத்தில் அது மத்திய அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

விசாரணை நடந்து வருகிறது
இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவரின் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பெரிய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மும்பையில் உள்ள இவரின் பல கோடி சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டது. இது தொடர்பாக லண்டனிலும் விசாரணை நடந்து வருகிறது.

எங்கு
ஆனால் இவர் எங்கே இருக்கிறார் என்ற விஷயம் மட்டும் தெரியாமல் இருந்தது. மேற்கத்திய தீவுகளில் இவர் பதுங்கி இருக்கிறார். பிரிட்டனில் சில நாடுகளில் மறைமுகமாக வசித்து வருகிறார் என்றெல்லாம் நிறைய செய்திகள் வந்தது. கடைசியில் நீரவ் மோடி லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டார்
லண்டனில் தியேட்டர் டிஸ்டிரிக்ட் என்ற பகுதியில் நீரவ் மோடி கைது செய்யப்பட்டார். ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸ் மூலம் இவர் கைது செய்யப்பட்டு கடந்த மார்ச் 19ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்று விசாரணை
மத்திய லண்டன் வங்கியில் இவர் புதிய கணக்கு துவங்க வந்த போது போலீசால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் லண்டன் நீதிமன்றம் நீரவ் மோடிக்கு பெயில் அளிப்பது தொடர்பான வழக்கை இன்று விசாரித்தது. நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பாக நீரவ் மோடி வழக்கறிஞருக்கும், இந்திய அதிகாரிகளின் வழக்கறிஞர் தரப்பிற்கும் இடையே கடுமையான வாதம் நடைபெற்றது.

முடிவு
இந்த நிலையில் விசாரணையின் முடிவில் நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் நீரவ் மோடி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications