மதுரைக்காரருக்கு ரூ.81 லட்சம் நிவாரணம்.. ‛அடிமை' என பணி நீக்கிய மேனேஜருக்கு ஆப்பு! கோர்ட் அதிரடி
லண்டன்: மதுரையை பூர்வீமாக கொண்ட மாதேஷ் ரவிச்சந்திரன் தன்னை அடிமை என்று தரக்குறைவாக பேசி பணி நீக்கம் செய்த லண்டன் கேஎப்சி மேனேஜருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாதேஷ் ரவிச்சந்திரனுக்கு ரூ.81 லட்சத்தை நிவாரணமாக வழங்க அதிரடியாக உத்தரவிட்டது. இந்த வழக்கின் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

மதுரையை பூர்வீகமாக கொண்டவர் மாதேஷ் ரவிச்சந்திரன். இவர் லண்டனில் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள வெஸ்ட் விகம் பகுதியில் உள்ள கேஎப்சி உணவகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
அந்த கேஎப்சி உணவகத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கஜன் என்பவர் மேனேஜராக பணியாற்றி வந்தார். இந்த உணவகத்தில் மாதேஷ் ரவிச்சந்திரன் உடன் இலங்கை தமிழர்களும் பணியாற்றி வந்தனர்.
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் மாதேஷ் ரவிச்சந்திரன் பணிக்கு சேர்ந்தார். மேனேஜர் கஜன் தான் இண்டர்வியூ வைத்து அவரை பணிக்கு சேர்ந்தார். ஜூலை மாதம் மாதேஷ் ரவிச்சந்திரனுக்கு கூடுதலாக பணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு விடுமுறை வழங்குவது கிடையாது. இதுபற்றி மாதேஷ் ரவிச்சந்திரன் கேட்டதற்கு மேனேஜர் கஜன் திமிராக பேசி உள்ளார். ‛‛நீ எல்லாம் அடிமை. இந்தியர்கள் மோசடிக்காரர்கள்'' என்று இனபாகுபாட்டுடன் நடந்து கொண்டுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு விடுப்பு வழங்கியதோடு, மாதேஷ் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்க மறுத்துள்ளார். இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து மாதேஷ் ரவிச்சந்திரன் பணியை விட்டு நிற்பதாக கூறியுள்ளார். முறைப்படி பணியில் இருந்து நின்றால் பணபலன், ஈட்டிய விடுப்புக்கான சம்பளம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இதனால் மேனேஜர் கஜன், அவரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார்.
மாதேஷ் ரவிச்சந்திரன் நோட்டீஸ் பீரியட்டாக ஒரு வாரம் பணியாற்றியபோது அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவருக்கான பண பலன்கள் வழங்கப்படவில்லை. இதனால் மாதேஷ் ரவிச்சந்திரன் அங்குள்ள தீர்ப்பாயத்தில் செப்டம்பர் மாதம் வழங்கு தொடர்ந்தார். மொத்தம் 66,800 பவுண்ட்டை நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
வழக்கை தீர்ப்பாயத்தின் நீதிபதி பால் அபோர்ட் விசாரித்தார். அப்போது மாதேஷ் ரவிச்சந்திரனின் பணி நீக்கம் சட்டவிரோதமானது. அதோடு மேனேஜர் இனபாகுபாட்டுடன் நடந்து கொண்டதை உறுதி செய்தார். மேலும் 60 ஆயிரம் பவுண்ட்டை நிவாரணமாக வழங்க உத்தரவு பிறப்பித்தார். இதன் இந்திய மதிப்பு ரூ.81 லட்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications