பெயில் கொடுத்தா ஓடிடுவாரு.. நீரவ் மோடியின் ஜாமின் மனு 3வது முறையாக தள்ளுபடி.. லண்டன் நீதிமன்றம்
லண்டன்: பஞ்சாப் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு லண்டனுக்கு ஓடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமின் மனுவை லண்டன் நீதிமன்றம் 3வது முறையாக தள்ளுபடி செய்துள்ளது.
மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி (வயது 48), இவர் மும்பையின் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் கடன் உறுதி பத்திரங்களை பயன்படுத்தி, வெளிநாட்டு வங்கி கிளைகளில், சுமார்சுமார் ரூ.13 ஆயிரத்து 500 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக குற்றாச்சாட்டு உள்ளது.
இவர் இந்தியாவை விட்டு தப்பிச்சென்ற பிறகே பஞ்சாப் வங்கியில் மோசடி செய்த விவகாரம் தெரியவந்தது.

லண்டனில் சிக்கிய நீரவ்
நீரவ் மோடி எந்த நாட்டில் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில், ஊடகங்கள் வாயிலாக இங்கிலாந்து நாட்டின் லண்டனில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்திய அரசு நீரவ் மோடியை நாடு கடத்துமாறு கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று இங்கிலாந்து நீதிமன்றம் நீரவ் மோடிக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இதன் பின்னர் லண்டன் போலீசார், நீரவ் மோடியை கடந்த மார்ச் 19ந்தேதி கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு
இதையடுத்து உடனடியாக 20ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீரவ் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை நீதிபதி மேரி மல்லான் தள்ளுபடி செய்துவிட்டார். இதையடுத்து போலீசார் நீரவ் மோடியை வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைத்தனர்.

நீரவ் மனு தள்ளுபடி
இதேபோல் கடந்த மார்ச் 29ம் தேதி நீதிமன்ற காவல் முடிந்த போதும் நீரவ் மோடி ஜாமின் மனு தாக்கல் செய்தார். அப்போது சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இருப்பதாக கூறி,அந்த மனுவையும் லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இப்போது மூன்றாவது முறையாக நீரவ் மோடி நேற்று ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.

நீரவ் மனு நிராகரிப்பு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்மா அர்புத்நாட், இது ஒரு மிகப்பெரிய மோசடி, ஜாமினுக்கான உத்தரவாத தொகையாக 2 பில்லியன் பவுண்டுகள் போதாது. ஜாமின் வழங்கப்பட்டால் சரண் அடைவார் என்ற நம்பிக்கை இல்லை என்ற கூறி அவருக்கு ஜாமின் வழங்க முடியாது என உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications