லண்டனில் பொது முடக்கம்.. புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இல்லை!
லண்டன்: பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தளர்வுகளை ரத்து செய்தார் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன். இன்று முதல் டிசம்பர் 30 வரை பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளார்.
200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அதன் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்ததை அடுத்து பெரும்பாலான நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்வு செய்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா இந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதாக நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் அதன் இரண்டாவது அலை பல இடங்களில் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது. இது தற்போதுள்ள வைரஸை காட்டிலும் 70 சதவீதம் அளவுக்கு வேகமாக பரவுகிறது. இதையடுத்து பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்.
இந்த முறை கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாட முடியாது என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்வதாக போரீஸ் தெரிவித்தார். கொரோனா தடுப்பு மருந்துகள் செயல்திறன் கொண்டவையாக இருப்பதாக ஜான்சனும் மருத்துவ நிபுணர்களும் நம்புகிறார்கள்.
புதிதாக பரவி வரும் வைரஸ் உயிர்க் கொல்லியாகவும் மிகவும் மோசமானதாகவும் இல்லை. எனினும் அவ்வாறு மாறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பிரிட்டன் அரசு எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications