அடிக்கிற ஆடிக் காத்துல.. இங்கிலாந்து பிரதமரின் குடையே பறக்குது பாருங்க !
லண்டன்: பணியின் போது இறந்த காவலர்களுக்கு அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் போது அதிக காற்றால் குடையை பிடிக்க இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் போராடினார். இதை பார்த்த அங்கிருந்தோர் பட்டும் படாமல் சிரித்தனர்.
இங்கிலாந்தில் பணியின் போது இறந்த போலீஸ் அதிகாரிகளின் நினைவிடத்தில் அவர்களது தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

போரீஸ் ஜான்சன்
இந்த நிகழ்வுக்கு பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோர் வெட்டவெளியில் இறந்த காவலர்களின் நினைவிடத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலத்த காற்று இருந்தது. இதனால் அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கையில் குடையுடன் அமர்ந்திருந்தனர்.

குடை
எல்லாரையும் போல்தான் போரீஸ் ஜான்சனும் குடை பிடித்திருந்தார். ஆனால் என்னவோ தெரியவில்லை, அவரது கெட்ட நேரம், அந்த தலைவருக்கு குடை கூட "அடிபணிய" மறுத்துவிட்டது. குடையை விரிப்பதற்கு போரீஸ் போராடுகிறார். அவருக்கு பின்னால் இருந்தவர்கள் பயந்து பயந்து சிரிக்கிறார்கள்.
|
தானாக மடங்கிய குடை
பின்னர் குடையை எப்படியோ விரித்தார். ஆனால் தானாக மடங்கி கொண்டது. பின்னர் குடையை இரு கைகளாலும் முட்டுக் கொடுத்து பிடித்திருந்தார். அவரது நிலையை பார்த்து அவருக்கே சிரிப்பு வந்தது. கடைசியில் சேட்டிலைட் டிஷ் போல குடை மேற்பக்கமாக விரிந்து கொண்டது.

இளவரசர்
ஆனால் இந்த ரணகளத்திலும் அவர் இளவரசர் சார்லஸின் குடையை பார்க்கிறார். அவருக்கு மட்டும் அப்படியே நிற்கிறதே, நமக்கு மட்டும் ஏன் படியவில்லை என்பது போல் பார்க்கிறார். இவரது செயல்களை பார்த்த இளவரசர் சார்லஸும் சிரிக்கிறார். 15 நிமிடங்களாக இப்படியே போரீஸ் போராடியதை பார்த்து மெல்ல சிரித்து கொண்டிருந்தார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications