சார்லஸை விடுங்க! எலிசபெத் முடிசூட்டு விழாவில் நேரு கலந்து கொண்டது தெரியுமா! அப்போ அவர் என்ன சொன்னார்
லண்டன்: பிரிட்டன் மன்னராக சார்லஸ் முடிசூட்டிக் கொள்ளும் நிலையில், ராணி எலிசபெத் முடிசூட்டு விழா குறித்து ஒரு விஷயம் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
பிரிட்டன் மன்னராக சார்லஸ் இன்று முடிசூட்டுகிறார். இதற்காக ஒட்டுமொத்த பிரிட்டனும் கோலாகலமாக ரெடியாகி வருகிறது. 70 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் இந்த விழாவில் உலகெங்கும் இருந்து பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாகத் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர் இந்த விழா நிகழ்வில் கலந்து கொள்கிறார். ஜக்தீப் தங்கர் மட்டுமின்றி இந்தியாவில் இருந்து இரு டப்பாவாலாக்கள் உள்ளிட்ட சிலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
நேரு: சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, 1953 ஜூன் 2ஆம் தேதி இரண்டாம் எலிசபெத் ராணியின் முடிசூட்டு விழா நடைபெற்ற போது, இந்தியாவின் சார்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டார். அப்போது அவர் பிபிசிக்கு தனது முதல் டிவி நேர்காணலையும் அளித்தார்.. முடிசூட்டு விழாவை புகழ்ந்து பேசிய நேரு, லண்டன் கூட்டத்தையும் அவர்கள் நடந்துகொண்ட விதத்தையும் பாராட்டினார்.
இருப்பினும், நேருவின் இந்த நடவடிக்கை இந்தியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து சில ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ள நேரு எடுத்த முடிவிற்கு விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து பிபிசி நேர்காணலில் கேட்ட போதும், அது ஒன்றும் இல்லை என்றே அவர் கூறினார்.

1953இல், ராணி எலிசபெத் முடிசூட்டப்பட்டபோது, இந்தியா முடிசூட்டு விழாக்களுக்கு புதிய நாடு இல்லை. ஏனென்றால், ஏற்கனவே 1877, 1903, 1911 ஆண்டுகளில் பிரிட்டன் அரச குடும்ப முடிசூட்டு விழாவை முன்னிட்டு டெல்லியிலும் மிக பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தது. இவை, டெல்லியில் உள்ள கொரோனேஷன் பூங்காவில் நடைபெற்றன.
வேறு நிலைமை: விக்டோரியா மகாராணி தலைமை பொறுப்பிற்கு வந்த போது, தனது ஆட்சியின் கீழ், சுதந்திரம், சமத்துவம் மற்றும் நீதி ஆகியவை மேலோங்கும் என்று இந்தியர்களுக்கு உறுதியளித்தார். மேலும் அவர் இந்திய ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக மனதார விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல பல இந்திய மன்னர்களும் கூட எழுந்து ஆரவாரம் செய்து, ராணி விக்டோரியாவுக்காக பிரார்த்தனை செய்து கொண்டனர்.
ஆனால், ராணி எலிசபெத் முடிசூட்டிய போது நிலைமை வேறு விதமாக இருந்தது. 1953இல் ராணி எலிசபெத் அரியணை ஏறும் போது, இந்தியா ஒரு சுதந்திரம் நாடாக இருந்தது. எனவே, அந்த சூழலில் இந்தியச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவரான நேரு இந்த முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளச் சென்றது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது.
ஏனென்றால் லண்டனில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே இந்திய மாணவர்களின் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். அது இந்தியாவின் சுதந்திரத்திற்காக முழக்கமிட்டது. காங்கிரஸில் இணைந்து நேரு ஆங்கிலேயர்களை எதிர்த்தார்.
விவாதம் ஏன்: 1931 ஆம் ஆண்டு நேருவைச் சந்தித்த இந்திய வைஸ்ராய் பிரபு இர்வின் பிரபு, இந்தியாவின் வருங்காலப் பிரதமர் "சமாளிக்க முடியாதவர், சமரசமற்றவர் மற்றும் முழுமையான சுதந்திரத்திற்காக உழைக்கத் தீர்மானித்தவர்" என்று கூறியதாகச் சான்றுகள் உள்ளன.
அப்படிப்பட்ட நபர் ஒருவர் சுதந்திரம் அடைந்த பிறகு அவர் ராணி எலிசபெத் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டது சர்ச்சையானது. இருப்பினும், இந்தியாவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே நேரு அந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றே பலரும் குறிப்பிடுகின்றனர்.
ராணி எலிசபெத் முடிசூட்டு விழாலில், நேரு மட்டுமின்றி, மியான்மர் மற்றும் பாகிஸ்தானின் பிரதமர்கள், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்ஜ் மார்ஷல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இருப்பினும், நேருவை போல அவர்களது வருகை எந்தவொரு பெரிய சர்ச்சையையும் உருவாக்கவில்லை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications