பெஞ்சில் உட்காருவதில் தகராறு ...பள்ளி வகுப்பறையில்... 10-ம் வகுப்பு மாணவனை சுட்டுக்கொன்ற சக மாணவன்!
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளி வகுப்பறையில் சக மாணவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 10-ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்தனர்.
பெஞ்சில் உட்காருவது தொடர்பாக அந்த இரு மாணவர்களும் சண்டை போட்டுள்ளனர். இந்த சாதாரண சண்டை மிகப்பெரிய கொலையில் போய் முடிந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயதுடைய இரண்டு மாணவர்கள் பெஞ்சில் உட்காருவதில் தொடர்பாக கடந்த புதன்கிழமை சண்டை போட்டனர். பின்னர் இருவரும் மாலையில் வீட்டுக்கு திரும்பி விட்டனர். ஆனால் அதில் ஒரு மாணவர் அந்த சண்டையை இன்று காலை வரை மனதில் வைத்து இருந்தார். தன்னுடன் சண்டையிட்ட சக மாணவரை கொலை செய்ய திட்டமிட்ட அவர் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியை புத்தக பையில் மறைத்து வைத்து பள்ளி கூடத்துக்கு எடுத்து சென்றார்.
தொடர்ந்து தீராத ஆத்திரத்தில் இருந்த அந்த மாணவர், தன்னுடன் சண்டையிட்ட மாணவரை வகுப்பறையில் வைத்து 3 முறை துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதில் தலை, மார்பு மற்றும் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்த அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட மாணவர் அங்கு இருந்து தப்பி செல்ல முயன்றார். சக மாணவர்கள், ஆசிரியர்கள் அவரை பிடிக்க முயன்றபோது வானம் நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவர்களை மிரட்டினார். ஆனாலும் ஆசிரியர்கள் அந்த மாணவரை மடக்கி பிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் துப்பாக்கியால் சுட்ட மாணவரை கைது செய்தனர். அவர் வைத்து இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அவரது பையில் மற்றோரு நாட்டு துப்பாக்கி இருப்பதையும் கண்டுபிடித்தனர். அந்த மாணவரின் மாமா ராணுவத்தில் பணிபுரிகிறார். அப்போது அவர் விடுமுறையில் வீட்டுக்கு வந்துளளதால், மாணவர் அவரின் துப்பாக்கியை எடுத்து வந்து இந்த படுபாதக செயலை அரங்கேற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications