உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரியில் சேர்ந்த 17 வயது சிறுமி.. மயக்க மருந்து தந்து சீரழித்த ஊழியர்கள்
அரசு ஆஸ்பத்திரியில் 17 வயது பெண்ணை நாசம் செய்துள்ளனர் 2 ஊழியர்கள்
லக்னோ: உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன 17 வயசு பெண்ணை, மயக்கம் அடைய செய்து, நாசம் செய்துள்ளனர் 2 ஆஸ்பத்திரி ஊழியர்கள்!
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸாவை சேர்ந்த 17 வயது இளம் பெண் ரஞ்சிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 17 வயதாகிறது. இவருக்கு கொஞ்ச நாளாகவே உடம்பு சரியில்லை.

அதனால் அங்குள்ள அரசு டிபி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கடந்த 23-ம் தேதி சேர்க்கப்பட்டிருந்தார். பெண்ணின் அம்மா கூடவே மகளுடன் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு, ரஞ்சிதாவின் அம்மா தூங்கி விட்டார் .
மணி 10 இருக்கும். வார்டு பாய் சிவானந்தன் ஊசி போட வேண்டும் என்று ரஞ்சிதா ரூமுக்கு வந்தார். ரஞ்சிதாவும் தூங்கி கொண்டிருந்த அம்மாவை எழுப்ப போனார். அதற்கு சிவானந்தம் தூங்கிறவங்களை ஏன் எழுப்பறே என்று கேட்டு தடுத்து, கீழே உள்ள அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பிறகு அந்த ரூமுக்கு சென்றவுடன் ரஞ்சிதாவுக்கு மாத்திரை ஒன்றினை சிவானந்தம் தரவும், அதை வாங்கி சாப்பிட்ட ரஞ்சிதா கொஞ்ச நேரத்தில் மயங்கி விழுந்து விட்டார். இதற்கு பிறகு, சிவானந்தம், ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் விஷால் என்பவரை அழைத்து, ரஞ்சிதாவை பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மயக்கம் தெளிந்த பிறகுதான் ரஞ்சிதாவுக்கு தன் நிலைமை புரிந்தது. நடந்த கொடுமையை அம்மாவிடம் சொல்லி கதறி உள்ளார். இதையடுத்து, ஆஸ்பத்திரியில் புகார் சொல்ல, விஷயம் போலீஸ் வரை போனது.
ரஞ்சிதாவின் அம்மாவின் புகாரின் பேரில் ஆஸ்பத்திரி ஊழியர்களான சிவானந்தம், விஷால் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான விசாரணையும் நடக்கிறது. அரசு ஆஸ்பத்திரியில் இளம் பெண்ணை கூட்டு பாலியல் செய்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications