மாஸ்டர் மைண்ட்.. 'உபி' தேர்தல் வியூகத்தை ஆரம்பித்த அமித்ஷா.. சந்தித்த அனுப்பிரியா படேல்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு இப்போதே பாஜக மேலிடம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் கட்சியின் மூத்த தலைவர் அனுப்பிரியா படேலை அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அப்போது அவர் உத்தரப்பிரதேசத்தில் தங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவியும், மத்திய அமைச்சரவையில் ஒரு இடமும் வேண்டும் என்று கேட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இரண்டு முறையும் வருவதற்கு முக்கிய காரணமே உத்தரப்பிரதேசம் தான். அங்கு தான் நாட்டிலேயே அதிகமாக 80 எம்பிக்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் 80 இடங்களில் 71 இடங்களை பாஜக வென்று அசத்தியது. இதற்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவும் முக்கியமான பார்க்கப்பட்டது.

2017 தேர்தல்
கடந்த 2017 சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளை காலி செய்து பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போது பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் ஒன்பது சட்டமன்ற இடங்களை வென்றிருந்தது. பாஜக உடன் 2014முதுல் அப்னா தளம் கூட்டணியில் இருக்கிறது.

அமித் ஷா வியூகம்
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறம் சட்டசபை அதிக இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜக ஆர்வம் காட்டுகிறது. அதற்காக கூட்டணி கட்சிகளை பாஜக டெல்லி மேலிடம் பேசிவருகிறது. அமித்ஷாவே நேரடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். வெற்றிக்கான வியூகம் குறித்து இப்போதே உத்தரப்பிரதேச தலைவர்களை அழைத்து பேசி வருகிறார்.

வைத்த டிமாண்ட்
அந்த வகையில் தான் பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளத்தை அழைத்து அமித்ஷா பேசினார். அப்போது அப்னா தளம் தலைவர் அனுப்பிரியா படேல், உத்தரப்பிரதேசத்தில் தங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவியும், மத்திய அமைச்சரவையில் ஒரு இடமும் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. நிஷாத் சாம்ராஜ் உள்ளிட்ட மற்ற உத்தரப்பிரதேச கட்சி தலைவர்களையும் அமித்ஷா அழைத்து பேச உள்ளாராம்.

தொடக்கம் இது
உபியின் குர்மிக்களிடையே ஆதரவைக் கொண்ட கட்சி அப்னா தளம்,. கடந்த 2019 தேர்தலின் போது பாஜக கூட்டணி கட்சிகளை கண்டு கொள்ளவில்லை" என்று குற்றம் சாட்டி விலகுவதாக அச்சுறுத்தியது. ஆனால் பாஜக மேலிடம் சமாதானம் காரணமாக அவர் முடிவை கைவிட்டிருந்தார். இந்நிலையில் யோகி ஆதித்யாநாத்தும் இன்று டெல்லி வந்தார். பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி கட்சியினரை அணுசரித்து, கொரோனாவை சமாளித்து, பிரதமர் மோடியின் செல்வாக்கை நிலைநிறுத்தி வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதற்கான தொடக்கம் தான் கூட்டணி கட்சிகளுடனான சந்திப்பாம்.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
18 தொகுதிகளில் திமுக VS பாஜக மோதல்.. 5 இடங்களில் அமைச்சர்களுடன் மல்லுகட்டும் ‘தாமரை'.. லிஸ்ட் இதோ -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications