இடத்தை சொல்லுங்க.. சி.ஏ.ஏ. விவாதத்துக்கு நாங்க ரெடி... அமித்ஷாவுக்கு அகிலேஷ், மாயாவதி பதிலடி
Recommended Video
லக்னோ: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பொது விவாதத்துக்கு தாங்கள் தயார் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் சி.ஏ.ஏ. ஆதரவு பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அதில் பேசிய அமித்ஷா, போராட்டங்களைக் கண்டு நாங்கள் அச்சப்படமாட்டோம். சி.ஏ.ஏ.வை ஒருபோதும் திரும்பப் பெறவும் மாட்டோம் என்றார்.

மேலு சி.ஏ.ஏ. தொடர்பாக பொது விவாதத்துக்கு அகிலேஷ் யாதவும் மாயாவதியும் வர தயாரா? என்றும் அமித்ஷா சவால்விடுத்திருந்தார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில், அமித்ஷாவே விவாதத்துக்கான இடத்தை தேர்வு செய்யட்டும். அவருக்கு சாதகமான டிவி சேனல்கள், தொகுப்பாளர்களையும் அழைக்கட்டும். நாங்கள் விவாதத்துக்கு தயாராக் இருக்கிறோம். மதத்தின் அடிப்படையில் மக்களை பாஜக பிரிக்கிறது என்றார்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களால் மத்திய அரசு கதிகலங்கிப் போயுள்ளது. இளைஞர்கள், பெண்கள் நாடு முழுவதும் போராடி வருகின்றனர். இதனால்தான் எதிர்க்கட்சி தலைவர்களை விவாதத்துக்கு அழைக்கின்றனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ள சவாலை பகுஜன் சமாஜ் கட்சி ஏற்கிறது. எந்த இடத்திலும் அமித்ஷாவுடன் விவாதத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications