உ.பி.: பாஜகவிற்கு 235 தொகுதிகள்.. சமாஜ்வாதிக்கு 165 சீட் கிடைக்கலாம்! இந்தியா டிவி கருத்துக்கணிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாஜகபெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, அடுத்த மாதம் 10ல் துவங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடக்கவுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. உத்திரப்பிரதேச தேர்தலை நாடே உற்று நோக்கி வருகிறது

தேர்தல் களம்
உத்திரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க போராடி வருகிறது. அதே சமயம் சமாஜ்வாடி கட்சி அகிலேஷ் யாதவால் பலம் பெற்று வருகிறது. இந்த இரு கட்சிகளுக்குத் தான் போட்டி என்று முடிவாகிவிட்டது. அடுத்த முதல்வர் அகிலேஷ் யாதவா அல்லது யோகி ஆதித்யநாத்தா என்று கருத்துக் கணிப்புகள் நடைபெற்று வருகின்றன.

கருத்துக்கணிப்பு
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. கடந்த வாரம் ஏபிபி சிவோட்டர் கருத்து கணிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதில், பாஜக 223 முதல் 235 இடங்களைப் பிடிக்கும் என்று தெரிவித்திருக்கிறது. இந்தியா டிவி கருத்து கணிப்பில், பாஜக 230 - 235 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அகிலேஷ் யாதவ் கட்சி 160 - 165 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது. ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பிலும் பாஜகவே மறுபடியும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்
இதுவரை உத்தரப்பிரதேச தேர்தலுக்கான வந்துள்ளக் கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான நிலையில் இருப்பதையே உணர்த்தியுள்ளன. இரண்டு இலக்கங்களில் வெற்றி பெறுவதே சிரமம் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு ஏழு தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், உத்தரப்பிரதேசத் தேர்தலுக்கான இந்தியா டிவி கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச்த்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 230 முதல் 235 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு
தெரிவித்திருக்கிறது.

கோரக்பூரில் வெற்றி
சமாஜ்வாதி கட்சி 160 முதல் 165 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 7 தொகுதியும்,பகுஜன் சமாஜ் கட்சி 2 முதல் 5 இடங்களைக் கைப்பற்றும் என்றும் இந்தியா டிவி-யின் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. மேலும், கோரக்பூரில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் வெற்றி பெறுவார் என்றும் தெரியவந்துள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications