வளர்ச்சிக்கான பயணத்தில் நாட்டை முன்னோக்கி இழுத்துச் செல்லும் என்ஜினாக உ.பி இருக்கும்! யோகி பெருமிதம்
லக்னோ: வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உத்தரப் பிரதேசம் நாட்டின் என்ஜினாக மாறும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
யோகி ஆதித்யநாத் லக்னோவில் முதல்வர் டாஷ்போர்டை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசம் இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக மாறும் திறன் கொண்ட மாநிலமாகும். கடின உழைப்புடன் முயற்சியையும் இணைத்தால் மாநிலம் வேற லெவலுக்கு உயரும். தற்போது செயல்பட தொடங்கியுள்ள டாஷ்போர்டு, ஒவ்வொரு துறையின் வளர்ச்சியையும் கண்காணிக்கும். இத வெளியிடும் புள்ளி விவரங்கள் மிகவும் முக்கியமானதாகும்.

இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆரோக்கியமான போட்டி உருவாக வேண்டும். நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை விரைவுபடுத்துவதுடன் தரவுகளை சேகரிப்பதும், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு காலக்கெடுவுக்குள் தீர்வு காண்பதும் இந்த புள்ளிவிர சேகரிப்பின் நோக்கமாகும். பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதே முதன்மை பணியாக இருக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகளின் போது கலவரம் ஏற்பட்டது. ஆனால், உத்தரபிரதேசத்தில் அமைதி நிலவியது.
அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்பாதவர்கள் அற்ப விஷயங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி சூழலை கெடுக்க முயற்சிக்கின்றனர். மாநிலத்திற்குள் திட்டமிடப்பட்ட எந்தவொரு நிகழ்வும் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதை உறுதிப்படுத்த காவல்துறை அதிகாரிகள் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் மற்றும் பிற அரசு ஊழியர்கள் தாங்கள் பணியமர்த்தப்பட்ட மாவட்டத்தில் வசிக்க வேண்டும். அதிகாரிகள் நியமிக்கப்படாத மாவட்டத்தில் வசிப்பதை மாநில அரசு பொறுத்துக் கொள்ளாது. அரசு இடவசதி இல்லை என்றால், அதிகாரிகள் வாடகை வீடுகளில் தங்கி, உரிய நேரத்தில் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும்.
அனைத்து அரசு ஊழியர்களின் பணியும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். காவல் நிலையங்களின் பணியை அந்தந்த காவல் துறைத் தலைவர்களும், மாவட்ட அளவிலான துறைகள் மாவட்ட ஆட்சியர்களும், கோட்ட அளவிலான துறைகளில் ஆணையரும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications