Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவோடு இரவாக அமேதி காங்கிரஸ் அலுவலகத்தில் தாக்குதல்! பிரியங்கா பிரச்சாரத்திற்கு வரும் நேரத்தில் பரபர

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி பிரச்சாரத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக 80 லோக்சபா சீட்களை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழு தட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது.

Congress Amethi office attacked cars vandalized hours before Priyanka Gandhi campaign


அங்கு பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இதனால் அங்கு அனைத்து தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

தாக்குதல்: இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மீது நேற்று நள்ளிரவு திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.. சத்தம் கேட்டு கட்சி தொண்டர்கள் அங்கு வரும் முன்பு, மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சாடல்: இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு பாஜகவினரே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள காங்கிரஸ், அமேதியில் தோல்வி பயத்தில் பாஜக வன்முறையில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாகச் சாடியுள்ளது..

மேலும் காங்கிரஸ், "தோல்வியைக் கண்டு விரக்தியடைந்த பாஜகவினர் பயங்கர ஆயுதங்களை எடுத்து வந்து அமேதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைச் சேதப்படுத்தினர். காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அமேதி மக்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் போது, ​​உள்ளூர் மக்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. அமேதியில் பாஜக படுதோல்வி அடைய போகிறது என்பதற்கு இதுவே சாட்சி" என்றார்.

படுதோல்வி உறுதி:
காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஷ்ரினேட்டும் இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.. அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அமேதியில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.. போலீசார் வேடிக்கை மட்டும் பார்த்ததால் பாஜக தொண்டர்கள் தங்கள் ரவுடித்தனத்தை தொடர்ந்தனர்.. வாகனங்களை உடைத்தாலும் பிரச்சனை தீராது. மக்கள் தங்கள் முடிவை எடுத்துவிட்டனர்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி: காங்கிரஸின் பிரியங்கா காந்தி இன்று ரேபரேலி மற்றும் அமேதியில் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அந்த பிரச்சாரத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய நபரான கிஷோரி லால் ஷர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பிரியங்கா காந்தி இன்று அந்த இரு தொகுதிகளிலும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். ராகுல் காந்தி இந்த முறை வயநாடு தொகுதியுடன் சேர்த்து ரேபரேலி தொகுதியிலும் களமிறங்குகிறார். ராகுல் காந்தி நாடு முழுக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருவதால் தேர்தல் முடியும் வரை ரேபரேலி மற்றும் அமேதியில் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தைக் கவனிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த இரு தொகுதிகளிலும் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் வரும் மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+