5வது டெஸ்ட்டும் பாசிட்டிவ்.. கனிகாவுக்கு என்னாச்சு.. அதிர வைக்கும் ரிசல்ட்.. சிகிச்சை தீவிரம்!
கனிகா கபூருக்கு 5வது டெஸ்ட்டிலும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
லக்னோ: எப்படியாவது அடுத்த முறை டெஸ்ட்டில் நெகட்டிவ் வரும் என்று நம்பிக் கொண்டிருந்த கனிகாவின் நம்பிக்கையில் மண் விழுந்துள்ளது.. கனிகாவுக்கு 5வது முறையாக கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.. அதிலும் பாசிட்டிவ் என்றே ரிசல்ட் வந்துள்ளது.. இதனால் அவர் பயந்து போய் உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
பாலிவுட் பாடகி கனிகா கபூர் சமீபத்தில் லண்டனுக்கு சென்று நாடு திரும்பினார்.. பிறகு தொடர்ச்சியாக 3 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார். இறுதியில் உடம்பு சரியில்லாமல் போகவும் ஆஸ்பத்திரிக்கு செக்-அப்புக்கு போனபோதுதான் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதியானது.

லக்னோ
இதையடுத்து, கனிகா லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... அங்கு அவர் ஒரு நோயாளி போல நடந்து கொள்ளவில்லை என்ற புகார் எழுந்தது.. ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு போதுமான ஒத்துழைப்பும் தராமல் அட்டகாசம் செய்ததாகவும் கூறப்பட்டது. கனிகாவால் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதால், கனிகாவை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

அறிகுறிகள்
எனவே, அறிகுறிகள் இருந்தும் அலட்சியமாக நடந்துகொண்ட கனிகாவின் மீது சரோஜினி நகர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன்புகூட கனிகாவுக்கு 3வதுமுறை கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது.. அதிலும் அவருக்கு பாசிடிவ் என்றே உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 4வது முறையாக டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதிலும் பாசிடிவ் என்றே ரிசல்ட் வந்தது.

நல்லா இருக்கேன்
இந்த 4-வது டெஸ்ட் ரிசல்ட் வந்தபிறகுதான் கனிகா கொஞ்சம் சீரியஸ் ஆனார்.. உடனே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "உங்களுடன் என்னுடைய அன்பை பகிர்ந்து கொள்கிறேன்... எல்லாம் வீடுகளில் பாதுகாப்பாக இருங்க நண்பர்களே... உங்களுடைய அக்கறைக்கு நன்றி... ஆனால் நான் ஐசியூவில் இல்லை... இப்போ நான் நல்லா இருக்கேன்.. அடுத்தமுறை டெஸ்ட் எடுக்கும்போது எனக்கு நெகட்டிவ் வரும்ன்னு நம்புகிறேன்... என் வீட்டுக்கு போய் என் குடும்பத்தையும், என் குழந்தைகளையும் பார்க்க நான் காத்து கொண்டிருக்கிறேன்" என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

நெகட்டிவ்
இந்நிலையில் 5-வது முறையாக கனிகாவுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதிலும் பாசிட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது.. பொதுவாக கொரோனா நோயாளிகளுக்கு ஒவ்வொரு 48 மணி நேரமும் சாம்பிள்கள் சோதனை செய்யப்படும்... அந்த வகையில்தான் அடுத்தடுத்த டெஸ்ட்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனாலும் கனிகா கபூர் உடல்நிலை சமநிலையில் இருப்பதாகவும், பயப்படுவதற்கு ஒன்னுமில்லை என்றும் ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்படுகிறது. 5வது முறை டெஸ்ட்ரில் எப்படியும் நெகட்டிவ் வரும் என்று நம்பிக் கொண்டிருந்த கனிகா, இப்போது கவலையுடனும் பீதியிலும் உள்ளாராம்!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications