லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனியாக இருந்த விதவை பெண்.. உதவிய ஆண் நண்பர்.. திரண்டு வந்து கிராம மக்கள்.. உபி ஷாக்!

விதவை பெண்ணுக்கு கிராம மக்கள் நூதன தண்டனை வழங்கினார்கள்

Google Oneindia Tamil News

லக்னோ: விதவை பெண்ணுக்கு மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து.. ஊர்வலம் நடத்தி உள்ள கொடுமை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

வன்முறைகளின் உச்சமாக வடமாநிலங்கள் மாறி வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் கற்பழிப்புகள், வன்முறைகள், காட்டுமிராண்டித்தமான செயல்கள் போன்றவை அரங்கேறியும் வருகின்றன.

 couple thrashed and paraded village over alleged affair in uttar pradesh

போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என மக்களுக்காக இருந்தாலும், இன்னமும்கூட சில கிராமங்களில் கிராம பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டு, அதிலேயே குற்றங்களுக்கு தண்டனையும் தரப்பட்டு வருகின்றன.. இதில் எல்லை மீறும் அநியாயங்களும், அக்கிரமங்களும் நடக்கின்றன.. அப்படி ஒரு சம்பவம்தான் இது!

உத்தரப் பிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 37 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவன் 2 மாசத்துக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

அதனால், அந்த பெண் தனியாக வசித்து வந்தநிலையில், உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்து வந்துள்ளார். அப்போது ஒரு நண்பர் அவருக்கு உதவி செய்ய வந்துள்ளார்.. அந்த நண்பர் ஒரு மாற்று திறனாளி.

விதவை பெண்ணுக்கு ஒரு ஆண் எப்படி உதவி செய்யலாம் என்று கேட்டதுடன், அதை தவறாகவும் பெண்ணின் உறவினர்கள் புரிந்து கொண்டனர்.. வீட்டில் ரகளை பண்ணி பிரச்சனையை செய்ததுடன், விஷயத்தை கிராம மக்களிடம் வந்து சொல்லிவிட்டனர்.. உடனே பஞ்சாயத்து கூடியது.

எல்லாரும் ஊருக்கு நடுவில் ஒன்று சேர்ந்தார்கள்... விதவை பெண்ணுக்கும், அவரது நண்பருக்கும் மொட்டை அடித்தனர்.. பிறகு பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து, செருப்புக்களாலேயே கடுமையாக தாக்கினர். வலி தாங்காமல் அந்த பெண் கதறி கதறி அழுதார்.. பிறகு ஊர்வலமாக கிராமத்தை சுற்றிலும் அழைத்து சென்றுள்ளனர்.

காதலிக்க மறுத்த தோழியின் தாயை ஆபாசமாக சித்தரித்த பிளஸ் 2 மாணவன் கைது.. சென்னையில் அதிர்ச்சிகாதலிக்க மறுத்த தோழியின் தாயை ஆபாசமாக சித்தரித்த பிளஸ் 2 மாணவன் கைது.. சென்னையில் அதிர்ச்சி

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அந்த வீடியோவில் மொட்டை அடிக்கப்பட்ட பெண் அழுதபடியே நடந்து செல்ல, அவருக்கு பின்னாடியே கிராம மக்களும் செல்கிறார்கள்.. குழந்தைகளும் அந்த கூட்டத்தில் உள்ளனர்.. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பெண்ணின் உறவினர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர்... மேலும் விசாரணையும் நடந்து வருகிறது.

English summary
couple thrashed and paraded village over alleged affair in uttar pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X