கொழுந்தனாரை காப்பாற்ற.. நிர்வாணமாக்கப்பட்ட அண்ணி! தலித் மக்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தனது கணவரின் சகோதரனை காப்பாற்ற, தலித் இளம்பெண் நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தோடர்பாக இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தீவிரம்காட்டி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கெரி பகுதியின் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்திருக்கிறது. ஊரில் இளம்பெண்ணின் கொழுந்தனாருக்கும், சில இளைஞர்களுக்கும் ஏற்கெனவே பஞ்சாயத்து இருந்திருக்கிறது. இது சமீப நாட்களாக உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. எனவே அடிக்கடி இளைஞர் மீது சிறிய அளவில் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதிக்கப்பட்ட இளைஞரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்தில் டென்ஷனான வன்முறை கும்பல், கடந்த வியாழக்கிழமை கிராமத்தின் கரும்பு தோட்டத்திற்கு இளைஞரை தூக்கி சென்று தாக்குதல் நடத்தியுள்ளது. விவரமறிந்த கிராம மக்கள் இளைஞரை மீட்க கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், தடுக்க முயன்றவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது. ஒருவர் தனது விரலை இழந்திருக்கிறார். இந்த சம்பவத்தை தடுக்க பாதிக்கப்பட்ட இளைஞரின் அண்ணி (தலித் சமூகத்தை சேர்ந்தவர்), முயன்றிருக்கிறார். ஆனால் அப்பெண்ணை வன்முறை கும்பல் தாக்கி நிர்வாணப்படுத்தியுள்ளது.
கிராம மக்கள் அனைவரின் முன்னிலையிலும், அப்பெண் படுகாயங்களுடன் நிர்வாணமாக நின்றிருக்கிறார். இதனையடுத்து, இளைஞரை அந்த கும்பல் விடுவித்திருக்கிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் 6 பேர் மீது பிஎன்எஸ் பிரிவு 191 (2), 191 (3), 115 (2), 352 (352), SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி சந்தோஷ் குமார் சிங் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் தலித் மக்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்த குற்றங்களை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தலித் அல்லது சிறுபான்மையினர் மக்கள் குற்றம் செய்யும்போது, அவர்களின் வீடுகள் இடிக்கப்படுகின்றன. ஆனால், அவர்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்கள் மட்டும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications