வாவ் சூப்பர்.. உத்தரப் பிரதேசத்தில் அடியோடு மாறும் மருத்துவத்துறை! யோகி ஆதித்யநாத் முன்முயற்சி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் சுகாதார தரத்தை மேம்படுத்த 'டிஜிட்டல் டாக்டர்' திட்டத்தை செயல்படுத்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு முயற்சி எடுத்திருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த 'டிஜிட்டல் டாக்டர்' திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.
டெலிமெடிசின் மற்றும் ஆன்-தி-ஸ்பாட் அடிப்படை நோயறிதல் திறன்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகளின் நலன்களை பாதுகாக்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது குறித்து x சோஷியல் மீடியா தளத்தில், "உத்தரபிரதேசத்தில் சுகாதார வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன், குறிப்பாக கிராமப்புறங்களில், 'டிஜிட்டல் டாக்டர்' வசதியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான முன்மொழிவுகள் தனியார் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறை மற்றும் மாநில அரசு அதன் இறுதி கட்டமைப்பை தீர்மானிக்கும்" என்று உ.பி அரசு கூறியுள்ளது.
இதன்படி முதலில், புலந்த்ஷாஹர் மற்றும் லக்னோவில் உள்ள 20 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தில் மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் மற்றும் தீவிர நோய்களுக்கான நோயியல் பரிசோதனை வசதிகள் ஆகியவை இருக்கும். மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட மானியங்களும் வழங்கப்படும் என்று உ.பி மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications