அசர வைக்கும் அயோத்தி ராமர் கோயில் கதவுகள்.. வடிவமைத்த தமிழர்கள்! என்னாது அந்த ஊர்க்காரர்களா?
லக்னோ: அயோத்தி ராமர் கோயிலுக்கான கதவுகளை தமிழர்கள்தான் வடிவமைத்தனர் என்ற தகவல் பெருமிதம் கொள்ள வைக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடிதான் நிறுவ உள்ளார்.

விழாவில் இந்து மதத்தை சேர்ந்த தலைவர்கள், நடிகர்கள், துறவிகள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கற்களை குடைந்து 350-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டன.
இதை கொண்டு ராமர், சீதாதேவியின் கருவறைகளும் அமைக்கப்பட்டன. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி லக்னோவே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயிலின் நுழைவு பகுதி, முன் மண்டபம், பக்கவாட்டு மண்டபம், சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வரும் வழி, லட்சுமணன், ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்பட 44 வாசல்களில் தேக்கு மரத்தில் ஆன கதவுகள் தயாராகி உள்ளது.
இந்த கதவுகளை யார் வடிவமைத்தது தெரியுமா, மாமல்லபுரம் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் படித்த குமரி மாவட்ட வெள்ளிசந்தையை சேர்ந்த மரச்சிற்பக் கலைஞர் ரமேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் அழகுற வடிவமைத்து முடித்துள்ளனர். சிற்பக் கலைஞர்களை கோயில் நிர்வாகத்தினர் அயோத்திக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கேயே அவர்களை எல்லாம் தங்க வைத்து கதவுகளை அமைக்கும் பணிகளை முடிக்க வைத்தனர். இரு யானைகள், இரு தேவ கன்னிகைகள் வரவேற்பது போல் தாமரை மலர்வது போலும் முன் மண்டப கதவுகளில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்காக தேக்கு மரங்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள பலாஷா காடுகளில் இருந்து பல 100 ஆண்டுகள் நிலைத்து நிற்க கூடிய மரங்கள் வாங்கப்பட்டன.
இது மட்டுமல்லாமல் கோயில் பிரதான வாயிலுக்கு 8 அடி உயரத்தில் மயில் சிற்பங்கள் அலங்காரத்துடன் 4 மடிப்பு அமைப்பில் கதவுகள் செய்யப்பட்டுள்ளன. முகப்பு மண்டபத்தின் மேல் மாடிக்கு செல்ல படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் சிற்பிகள் உருவாகிய கதவுகளுக்கு செப்புத் தகடுகள் பொருத்தி தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
கதவுகள் மட்டுமல்லாமல் ராமர் சிலையை கருவறையில் பிரதிஷ்டை செய்ய சிலையை கொண்டு செல்வதற்காக சிறிய பல்லக்கையும் மாமல்லபுரம் சிற்பிகள் செய்து கொடுத்துள்ளனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications