தரிசனத்துக்கு மறுப்பு.. காசி கோயில் ஊழியர்கள் கரார்! கடுப்பான பக்தர்கள் - கலவரமான கருவறை
லக்னோ: வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு வந்த பக்தர்களுக்கும் கோயில் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்திய அளவில் புகழ்பெற்ற கோயிலான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை 2 பக்தர்கள் காசி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்று இருக்கிறார்கள்.

தரிசனத்துக்கு மறுப்பு
அப்போது கோயில் ஊழியர்கள் கருவறையை மூடி ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் ஏமாற்றமடைந்த அந்த 2 பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக கருவறையை திறக்குமாறு கோரி இருக்கின்றனர். இதற்கு கோயில் ஊழியர்கள் 4 பேர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் பக்தர்கள் இருவரும் கோயில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கருவறைக்குள் கைகலப்பு
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கருவறைக்குள் புகுந்தனர். அங்கு இருதரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் தாக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த மேலும் சில கோயில் ஊழியர்கள் தகராறில் ஈடுபட்ட 2 பக்தர்களை கருவறையில் இருந்து வெளியேற்றினர்.

போலீசில் புகார்
இது தொடர்பாக காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகத்துக்கு ஊழியர்கள் கடிதம் எழுதி இருக்கின்றனர். அதில் பக்தர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தும்போது போலீசார் உதவிக்கு வரவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார்கள். அதே நேரம் அந்த 2 பக்தர்களுக்கு கோயில் ஊழியர்கள் 4 பேர் உட்பட 5 பேர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்து இருக்கின்றனர். சாமி தரிசனத்துக்கு தங்களை அனுமதிக்காததுடன், தங்களை கோயில் ஊழியர்கள் கடுமையாக தாக்கியதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சிசிடிவி காட்சி
இதற்கிடையே கோயில் கருவறைக்குள் இரு தரப்பினர் மோதிக்கொள்ளும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோயிலில் தரிசனம் செய்வது தொடர்பாக காவல்துறையினருக்கும் கோயில் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கண்டித்து கோயில் ஊழியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் பிரச்சனை சரி செய்யப்பட்டது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications