உ.பி.முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் காலமானார்.. பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்!
லக்னோ: உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89. நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த கல்யாண் சிங் முதலில் லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பினர் சுய நினைவு இழந்ததாலும், உடல் உறுப்பு செயல் இழந்ததாலும் ஜூலை மாதம் 4-ம் தேதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

கல்யாண் சிங் மரணம்
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் இன்று இரவு கல்யாண் சிங் உயிரிழந்தார். கல்யாண் சிங் கடந்த 1991-92 மற்றும் 1997-99 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இருந்துள்ளார். மேலும், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் கவர்னராகவும் இருந்துள்ளார். 1992-ம் ஆண்டு கல்யாண் சிங் முதல்வராக இருந்தபோதுதான் உத்தர பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி இரங்கல்
கல்யாண் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ' இந்தியாவின் கலாச்சார மீளுருவாக்கத்திற்காக கல்யாண் சிங் செய்த பங்களிப்புகளுக்காக வரவிருக்கும் தலைமுறையினர் என்றென்றும் தலைமுறையினர் நன்றியுடன் இருப்பார்கள். அவர் இந்திய மதிப்புகளில் உறுதியாக வேரூன்றி இருந்தார் மற்றும் நமது பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகளில் பெருமை கொண்டார்' என்று கூறியுள்ளார்.

மூத்த சகோதரர்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இரங்கல் செய்தியில் ' ஒரு "மூத்த சகோதரர்" மற்றும் ஒரு "தோழரை" இழந்துவிட்டேன். கல்யாண் சிங் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப இயலாது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி இயக்கத்தில் அவரது முக்கிய பங்குக்காக இந்த நாடு எப்போதும் அவரை நினைவுகூரும். அவரது மரணம் இந்திய அரசியலுக்கு பெரும் இழப்பாகும், இது எனக்கு மிகவும் சோகமான தருணம்.

பாஜகவை வலிமைபடுத்தியவர்
ஜன சங்கத்தின் காலத்திலிருந்து கல்யாண் சிங் பா.ஜ.க.வை வலிமைப்படுத்தி சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சென்றடைய கடுமையாக உழைத்தார்.இக்கட்டான நேரத்தில் கடவுள் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு பொறுமையையும் பலத்தையும் தரட்டும். ஓம் சாந்தி'' என்று ராஜ்நாத் இரங்களில் கூறியுள்ளார்.

பங்ககளிப்பு
''எங்கள் மூத்த தலைவர் மரியாதைக்குரிய கல்யாண் சிங் ஜி மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். கல்யாண் சிங் ஜி உத்தரப்பிரதேசத்தில் ஜனசங்கத்தையும் பாஜகவையும் உருவாக்குவதில் மிக முக்கியமான பங்களிப்பு செய்துள்ளார்'' என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications