உ.பி.யில் புதிதாக 7 மாவட்டங்களில் வன்முறை வெடிப்பு.. கலவரத்தை தடுக்க கண்ணீர் புகை குண்டு வீச்சு
Recommended Video
லக்னோ: வெள்ளிக்கிழமையான இன்று பிரார்த்தனைகளுக்குப் பிறகு ( பிற்பகலுக்கு பிறகு ) குறைந்தது ஏழு உத்தரப்பிரதேச மாவட்டங்களில் புதிதாக போராட்டங்கள் வெடித்தன.
உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த தடைகள் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாநிலம் தழுவிய தடை உத்தரவுகளை மீறி புதிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஏழு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், பல பகுதிகளில் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

கண்ணீர்ப்புகைக் குண்டு
இதனை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். அத்துடன் கூட்டத்தை விரட்டவும் நிலைமையைக் கட்டுப்படுத்தவும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

முசாபர் நகர்
முசாபர்நகர், பஹ்ரைச், புலந்த்ஷாஹர், கோரக்பூர், ஃபிரோசாபாத், அலிகார் மற்றும் ஃபருகாபாத் ஆகிய மாவட்டங்களில் புதிதாக வன்முறை சம்பவங்களும் போராட்டங்களும் தொடங்கி உள்ளன.

கல்வீச்சு
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள முக்கிய நகரமான கோரக்பூரில் மிகப்பெரிய அளவில் வன்முறை நடந்துள்ளது. இன்றைய ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக இரண்டு நிமிட நீள வீடியோ ஒன்றை செய்தி நிறுவனமான வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு குறுகிய சாலை முனையில் மக்கள் கூட்டம் நிற்பதை காண முடிகிறது. மற்றொரு பக்கம் காவல்துறை அதிகாரிகள் நிற்கிறார்கள்.
|
கற்கள் வீச்சு
வீடியோவில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கற்களை வீசி, போலீஸ்காரர்களை நோக்கி ஆவேசமாக பேசுகிறார்கள். ஆரம்பத்தில் இதற்கு எதிர்வினையாற்றாத போலீஸ்காரர்கள் கொஞ்ச நேரத்திற்கு பிறகு அவர்களும் கற்களை எடுத்து பதிலுக்கு கற்களை வீசினர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications