பூமிக்கு அடியில் அற்புதமான வீடு.. இந்தியாவை அசரடித்த சிற்பி.. பாராட்டி தள்ளிய ஆனந்த் மஹிந்திரா
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பூமிக்கு அடியில் 11 அறைகளுடன் மாளிகை கட்டி, 12 வருடங்களாக விவசாயி ஒருவர் வாழ்ந்து வருவது குறித்து கேள்விப்பட்ட தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, அவரை வெகுவாக பாராட்டினார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்தோய் என்ற பகுதியில் பூமிக்கு அடியில் இரண்டு மாடி வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 12 ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த அற்புதமான மாளிகையில் 11 அறைகள், ஒரு மசூதி, படிக்கட்டுகள், ஒரு கேலரி மற்றும் ஒரு ஓவிய அறை ஆகியவை இருக்கின்றன. பப்பு பாபா என்று அழைக்கப்படும் இர்ஃபான் என்பவர் தான் இந்த மாளிகையை கட்டி உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்த இர்பான் விவசாயி ஆவார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு வரை குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், அப்பாவின் மரணத்திற்கு பிறகு வாழ்க்கையில் வேறு பாதையில் பயணிக்க விரும்பினார். முதலில் தேர்தலில் போட்டியிட்டார் ஆனால் தோல்வி அடைந்தார். இதையடுத்து வாழ்வில் எதாவது புதுமையாக இந்த உலகில் செய்து காட்ட வேண்டும் என்று நினைத்தார்.
அதற்காக சினிமா பாணியில் பூமிக்கு அடியில் பாதாள வீட்டை கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி தரிசாக கிடந்த நிலத்தில் பூமிக்கு அடியில் தனிநபராக கடந்த 12 ஆண்டுகளாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்ட இவர் ஒரு மசூதி, 11 அறைகள், படிக்கட்டுகள் மற்றும் கேலரி, ஒரு சித்திர அறையுடன் கூடிய பிரமாண்ட மாளிகையை கட்டி உள்ளார்.
பண்டைய காலத்தில் இருந்தது போன்று மாளிகையை உருவாக்கியவர், கடந்த 12 வருடங்கள் அதற்காகவே வாழ்வையே அர்ப்பணித்துள்ளார். தற்போது அந்த மாளிகையில் தான் வசித்தும் வருகிறார்கள். இர்பானின் இந்த கட்டிடக்கலை பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும் இர்பானை பாராட்டி வருகிறார்கள்.
மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவையே யாரு சாமி நீ.. எனக்கே பார்க்கனும் போல இருக்கு.. பூமிக்கு அடியில் 11 அறைகளுடன் மாளிகை கட்டியிருக்கேப்பா என்று பாராட்ட வைத்துள்ளார் இர்பான்.
A man in Hardoi built this underground home over a period of 12 years. It’s described as something that’s simply offbeat. But it is a thing of beauty. The man is a sculptor… We need many more innovative and passionate architects like him 👏🏽👏🏽👏🏽 pic.twitter.com/eszJTJm2IK
— anand mahindra (@anandmahindra) September 14, 2023
ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "ஹர்டோயில் உள்ள ஒருவர் 12 வருடத்தில் பூமிக்கு அடியில் இப்படி ஒரு வீட்டை கட்டி உள்ளார். வெறும் கட்டிடம் என்று கடந்துவிட முடியாது. இது மிக அழகான விஷயம். இந்த வீட்டை கட்டிய அந்த மனிதர் ஒரு சிற்பி... அவரைப் போன்ற இன்னும் பல புதுமையான மற்றும் ஆர்வமுள்ள கட்டிடக் கலைஞர்கள் எங்களுக்குத் தேவை," என்று கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications