ஒரு குட்டிக் கட்சியையும் விடாதீங்க.. வளைச்சுப் பிடிங்க.. அதிரடியில் உ.பி. காங்கிரஸ்!
லக்னோ: இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளை வென்றுவிட தேசிய கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை பெரும் போரே நடத்தி வருகின்றன. இதற்காகவே இந்த தேர்தலில் இருதுருவங்களாக இருந்துவந்த சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் ஒன்றோடொன்று கை கோர்த்துள்ளன.
காங்கிரசோடு இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரசை கழட்டி விட்டுவிட்டு அவை இரண்டும் கூட்டணி அமைத்து விட்டன. இந்நிலையில் உ.பி.யில் அதிரடி காட்ட நினைத்த காங்கிரஸ் பிரியங்காவை களம் இறக்கியுள்ளது. பிரியங்கா வந்த பிறகு உ.பியில் நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது. அம்மாநிலத்தின் குறிப்பிடத்தக்க அளவில் உள்ள தலித் மக்கள் காங்கிரஸ் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

அகிலேஷ் யாதவ் கூட கூட்டணியை மறு பரிசீலனை செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் செய்திகள் உண்டு. ஆனால் அவர் மாயாவதியுடன் அதன் பிறகு காங்கிரசை சேர்த்துக் கொள்வது குறித்து எதுவும் பேசவில்லை. அதே வேளையில் காங்கிரசுக்காக அவர்கள் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் போட்டியிடாமல் இருப்பது அவர்களிடையே உள்ள மறைமுக கொடுக்கல் வாங்கலை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
இந்நிலையில் உ.பி.யில் காங்கிரஸ் சின்னஞ்சிறு கட்சிகளோடு கூட்டணி வைப்பது அந்தக் கட்சிகளை வளர்த்து விடுவதாகவே அமையும் என தனியார் நிறுவன புள்ளி விவரம் ஒன்று கூறியது. இதனால் அங்குள்ள சிறிய கட்சிகளை காங்கிரஸ் கண்டு கொள்ளாமல் இருந்தது. ஆனால் இப்போது பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உ.பி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் முலாயம்சிங் யாதவின் சகோதரருமான ஷிவ்பால் சிங் யாதவ் இப்போது காங்கிரசுடன் நெருக்கத்தில் உள்ளார். அவர் தனது கட்சியான பிரகதீஷல் சமாஜ்வாதி லோகியா கட்சி காங்கிரசோடு கூட்டணி அமைக்க விரும்புகிறார். அதோடு கேசவ் தேவ் மவுரியாவின் மஹான் தளம், முகம்மது அயூபின் அமைதி கட்சி ஆகிய கட்சிகளும் குறிப்பிடத்தக்க அளவில் வாக்கு வங்கியை வைத்திருக்கின்றன. இவற்றில் கேசவ் தேவ் மவுரியாவின் மஹான் தளம் கட்சியோடு பிரியங்கா உள்ளிட்ட காங்கிரசின் தலைவர்கள் முதற்கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மீதமுள்ள கட்சிகளோடும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசிவருகின்றனர். விரைவில் கூட்டணி அறிவிப்புகள் வெளிவரும் சூழல் நிலவுவதாக உ.பி காங்கிரசார் கூறுகின்றனர். அதோடு இப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் அப்னா தளம், பாரதிய சமாஜ் ஆகிய கட்சிகளும் காங்கிரசோடு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இதில் அப்னா தளம் கட்சியின் தலைவர் அனுப்ரியா படேல் மத்திய இணை அமைச்சராகவும், பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ராஜ்பரின் சுகல்தேவ் உ.பி மாநில அமைச்சராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications