'இவர்களுடன் மட்டுமே கூட்டணி..' உபி தேர்தலுக்கு பகுஜன் சமாஜ் தலைவர்..மாயாவதி போட்டுள்ள சூப்பர் பிளான்
லக்னோ: அடுத்தாண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துக் களமிறங்க உள்ளதாகப் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன.

உபி தேர்தல்
கொரோனா 2ஆம் அலைக்கு முன்பு வரை அங்கு பாஜக மிகப் பெரிய பலத்துடன் இருந்தது. இருப்பினும், கொரோனா 2ஆம் அலையை மோசமாகக் கையாண்டதில் அக்கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இதை 2024 மக்களவை தேர்தலின் முன்னோட்டம் என்று கூட சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

கூட்டணி இல்லை
மக்களவை தேர்தலில் அதிக எம்பிகளை கொண்ட மாநிலம் என்பதால் 2024 தேர்தலை ஆளும்கட்சியாக எதிர்கொள்ளவே அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன. இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் தனித்துக் களமிறங்க உள்ளதாகப் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டில் பெற்றதைப் போலவே உபியில் பகுஜன் சமாஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களுடன் கூட்டணி
இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை. நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்துத் தேர்தலைச் சந்திப்போம். மக்களுடன் நாங்கள் அமைக்கும் கூட்டணியே நிரந்தரமானது. சமாஜ்வாடி கட்சியும் (எஸ்பி) பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் தான். இருவரும் தேர்தலுக்காக இந்து-முஸ்லிம் அரசியலைக் கையில் எடுக்கிறார்கள்.

தனிப்பெரும்பான்மை பெறுவோம்
2007-ல் கிடைத்ததைப் போல அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவோம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். காங்கிரஸ் கட்சி கூறும் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டார்கள். காங்கிரஸ் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் 50 சதவிகிதத்தை நிறைவேற்றி இருந்தால் கூட, மத்தியிலும் பல மாநிலங்களிலும் அவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்திருக்காது" என்று கடுமையாக விமர்சித்தார்.

உபி தேர்தல்கள்
கடந்த 2007ஆம் ஆண்டு உபி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 206 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அடுத்து 2012இல் நடைபெற்ற தேர்தலில் 224 தொகுதிகளில் வென்று சாமஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வரானார். இருப்பினும், 2017 தேர்தல் முடிவுகள் தான் அனைவருக்கும் அதிர்ச்சி தந்தது. அப்போது தான் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 312 தொகுதிகளில் வென்று பாஜக அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications