வாரணாசியில் மோடி "பரிதாப வெற்றி.." இதுவரை இப்படி நடந்ததே இல்லை!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றிருக்கிறார். இது இவருடைய ஹாட்ரிக் வெற்றியாகும். இருப்பினும் கடந்த 3 தேர்தல்களில் வாங்கிய ஓட்டுகளில், மிகவும் குறைவாக ஓட்டுகள் பெற்றது இந்த தேர்தலில்தான்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்திருந்தன. குறிப்பாக மோடிக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானதாக இருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானால், நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராகும் தலைவர் என்கிற பெருமைக்கு மோடி சொந்தக்காரராவார். எனவே தனிப்பட்ட முறையில் இந்த தேர்தல் மோடிக்கு மிக முக்கியமானதாக இருந்தது.
தவிர 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்காக பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருக்க வேண்டியது முக்கியம். எனவே இந்த தேர்தலை பாஜக கவனமுடன் அனுகியது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடக்கத்தில் முதல் இரண்டு சுற்றுகளில் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முன்னணியில் இருந்தார். இது ஊடகங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியது. ஆனால் அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் பிரதமர் மோடி முன்னிலைக்கு வந்தார்.
இறுதியாக 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இருப்பினும் முந்தைய தேர்தலை விட தற்போது வாங்கிய வாக்குகள் 9.38 சதவிகிதம் குறைவு. அதேநேரம் காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 26.36 உயர்ந்து, 40.74 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இதே காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 4,79,505 வாக்குகளை மோடி பெற்றிருந்தார். மொத்த வாக்கு சதவிகிதம் 63.62 ஆக இருந்தது.
இதே 2014ம் ஆண்டு, மோடிக்கு எதிராக அஜய் ராய் மட்டுமல்லாது அரவிந்த் கெஜ்ரிவாலும் களமிறங்கியிருந்தார். இதில் 5,81,022 வாக்குகள் பெற்று மோடி வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் பிடித்த கெஜ்ரிவால் 2,09,238 வாக்குகளை பெற்றிருந்தார். இருவருக்கும் இடையில் வாக்கு வித்தியாசம் 3,71,784ஆக இருந்தது. காங்கிரசின் அஜய் ராய் 75,614 வாக்குகள் மட்டும் பெற்று மூன்றாம் இடம் பிடித்திருந்தார்.
இப்படியாக கடந்த 3 தேர்தல்களை ஒப்பிடும் போது மோடி, இந்த தேர்தலில்தான் மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications