கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யா நாத் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளார். அதில் முஷாபர் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்படும் எம்எல்ஏ உள்பட இரண்டு பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கி உள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த 2007ம் ஆண்டு பதவியேற்றது.
மொத்தம் உள்ள 403 இடங்களில் 325 இடங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது..

யோகி அதிரடி நடவடிக்கை
முதல்வர் யோகி ஆதித்யாநாத் அண்மையில் அமைச்சரவையில் சரியாக செயல்படாத ஆறுபேரிடம் ராஜினிமா கேட்டிருந்தாராம். இந்நிலையில் உடல் நிலையை காரணம் காட்டி அம்மாநில நிதியமைச்சரும் முன்னாள் பாஜக தலைவருமான ராஜேஷ் அகர்வால்(76) ராஜினாமா செய்தார்.

யோகி அமைச்சரவை விரிவாக்கம்
இதையடுத்து அமைச்சரவையை விரிவாக்கம் செய்த யோகி ஆதித்யா நாத், சுரேஷ் ரானா(49), ஸ்ரீ ராம் சௌகான்(65) இரண்டு பேருக்கு அதில் இடம் அளித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஆளுநர் ஆனந்தி பென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முஷாபர் கலவர வழக்கு
கடந்த 2013ம் ஆண்டு முஷாபர் நகர் கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லலப்படடனர்.. இது தொடர்பாக கிரிமினல் வழக்கு எம்எல்ஏ சுரேஷ் ராணா (தானா பவன் தொகுதி எம்எல்ஏ) மீது போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரும்பு நல வாரியத்துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக சுரேஷ் ராணாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நிலுவை தொகையை பெற்றுத்தருவதில் சுரேஷ் ராணா தீவிரமாக இருந்தாராம்

தனிபொறுப்புடன் அமைச்சர் பதவி
மற்றொரு எம்எல்ஏவான ஸ்ரீ ராம் சௌகான் முன்னாள் லோக்சபா எம்பியாவார். இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தார். தன்காட்டா தொகுதி எம்எல்ஏவான இவருக்கு தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

23 அமைச்சர்கள் உள்ளார்கள்
இதன் முதல்வர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் மட்டுமே பெண்கள். 6 பிராமணர்கள், 2 வைசியர்கள், 2தாகூர்கள், 10 ஒபிசி பிரிவினர் அமைச்சர்களாக பொறுப்பு வகிக்கிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications