'சைவ' உணவு விற்றால் மட்டுமே.. கேஎஃப்சிக்கு அனுமதி! அயோத்தியில் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சமீபத்தில்தான் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில், இந்த கோயிலின் அருகில் கேஎப்ஃசி கடையை திறக்க வேண்டும் எனில், சைவ உணவுகளை மட்டுமே விற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி பால ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் நரேந்திர மோடி, 'இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்' என்று கூறியுள்ளார். கும்பாபிஷேகத்தை நேரலையில் கண்டுகளிக்க நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கோயில்களில் எல்இடி திரை அமைக்கப்பட்டு நேரலை செய்யப்பட்டது.
பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனவரி 22ம் தேதி பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வதாக செல்லப்படுகிறது. எனவே இவர்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்ய அதிக அளவில் ஹோட்டல்கள் முளைத்திருக்கின்றன. இந்நிலையில், கேஎஃப்சி(KFC) அயோத்தியில் அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுந்தது.
இதற்கு மாவட்ட நிர்வாகம் பதிலளித்திருக்கிறது. அயோத்தி நிர்வாகம், 'பஞ்ச் கோசி மார்க்' எனும் முறையை பின்பற்றி வருகிறது. அதாவது அயோத்தி ராமர் கோயிலை சுற்றியுள்ள 15 கி.மீ தொலைவில் அசைவம் விற்க கூடாது என்பதுதான் இதன் அர்த்தம். ஆனால் அயோத்தியின் மற்ற பகுதியில் இதற்கு எந்த தடையும் இல்லை. எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் நிதிஷ் குமார் கூறுகையில்,
"அயோத்தியில் மற்ற பகுதிகளில் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு எந்த தடையும் இல்லை. KFC உட்பட அனைத்து பிராண்டுகளும் இங்கு விற்பனை நிலையங்களைத் திறக்க வரவேற்கப்படுகின்றன, ஆனால் இந்த நிறுவனங்கள் 'பஞ்ச் கோசி மார்க்' பகுதிக்குள் கிளையை திறந்தால், வெறும் சைவம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அயோத்தி மட்டுமல்லாது ஹரிதுவாரிலும் அதன் நகர எல்லைக்குள் இதுபோன்று அசைவ உணவு விற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications