முத்தலாக்கில் இருந்து முஸ்லீம் பெண்களை காப்பாற்றியது பாஜக.. ஹிஜாப் சர்ச்சைகளுக்கிடையே.. மோடி பேச்சு

Subscribe to Oneindia Tamil

லக்னோ:‛‛முஸ்லிம் பெண்களின் உரிமையை தடுக்கும் புதிய வழியை கண்டுபிடிக்கின்றனர்'' என மறைமுகமாக ஹிஜாப் சர்ச்சை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான இங்கு 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பிப்.,10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

People are finding new ways to block Muslim women rights, says PM Modi

முதற்கட்ட தேர்தல் இன்று (பிப்.,10) ஷாமிலி, ஹாபூர், கவுதம் புத் நகர், முஸாபர்நகர், மீரட், பாக்பாட், காசியாபாத், புலன்ட்சார், அலிகர், மதுரா, ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நடக்கிறது. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரபிரதேச மாநிலம் சகரான்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ‛‛முஸ்லிம் பெண்களின் உரிமை, வளர்ச்சியை தடுக்க புதிய வழிகளை கண்டுபிடிக்கின்றனர். உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் பெண்களுக்கான உரிமைகளை பாஜக தலைமையிலான அரசு காக்கும். முத்தலாக் முறையில் இருந்து முஸ்லிம் பெண்களை பாஜக விடுவித்துள்ளது. நீங்கள்(முஸ்லிம் பெண்கள்) வெளிப்படையாக பாஜகவை ஆதரிப்பதால் எதிர்க்கட்சியினர் கவலை அடைந்துள்ளனர். பாஜக எப்போதும் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக செயல்படும் '' என்றார்.

அதாவது கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பி பெரும் சர்ச்சையான நிலையில் பிரதமர் மோடி முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக பேசியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+