சமத்துவமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மக்கள் தொகை பெருக்கமே காரணம்: உ.பி. முதல்வர் யோகி
லக்னோ: சம்த்துவமின்மை உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமே மக்கள் தொகை பெருக்கம்தான் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
1987-ம் ஆண்டு முதல் ஜூலை 11-ந் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1987-ல் உலக மக்கள் தொகை 500 கோடியானது.

இதையடுத்து மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வுக்காக ஆண்டு தோறும் ஜூலை 11-ந் தேதி உலக மக்கள் தொகை நாள் கடைபிடிக்கப்படுகிறது.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சினைகளுக்கு அடிப்படையாக இருப்பது அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம்தான்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதுதான் சமுதாயத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை. இவ்வாறு யோகி ஆதித்யநாத் பதிவிட்டுள்ளார்.
நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருப்பது உத்தரப்பிரதேசம்தான். இம்மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை கிடையாது என்பதை நடைமுறைப்படுத்த உள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.












Click it and Unblock the Notifications