ஷாக்.. ரயிலில் ஏசி பெட்டியில் ஏறி வயதான தம்பதி மீது சிறுநீர் கழித்த போதை இளைஞர்.. உ.பியில் கொடூரம்
லக்னோ: ஓடும் ரயிலில் வயதான பயணிகள் மீது குடிபோதையில் இளைஞர் ஒருவர் சிறு நீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிசாமூதின் நகரில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள மனிகாபூர் வரை சம்பர்க் க்ரண்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் ஏசி பெட்டியான பி 3 கோச்சில் வயதான தம்பதியர் பயணம் செய்துள்ளனர். இருவருமே மருத்துவர்கள் என்று கூறப்படுகிறது. படுக்கை வசதி கொண்ட அந்த ரயிலில் லோயர் பெர்த்தில் இருவரும் இருந்துள்ளனர்.

அப்போது மதுபோதையில் அங்கு வந்த 19-வயதான இளைஞர் ரிதேஷ் என்பவர், அந்த தம்பதியர் மீதும் அவர்களின் லக்கேஜ் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதனால் தம்பதியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி ஸ்டேஷன் வழியாக ரயில் சென்று கொண்டிருந்த போது இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. உடனடியாக அந்த தம்பதியர் சத்தம் எழுப்பி டிடிஇக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் உடனடியாக அங்கு வந்த டிக்கெட் பரிசோதகரும் ஜான்சியில் உள்ள ரயில்வே போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுடுத்து, ஜான்சி ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் அங்கு போலீசார் தயாராக இருந்தனர். வயதான தம்பதியர் மீது சிறு நீர கழித்த ரிதேஷ் என்ற இளைஞரை ரயிலில் இருந்து இறக்கி விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் அந்த இளைஞர் மதுபோதையில் இருந்தவர் டெல்லியில் உள்ள குதுப் விஹாரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. உத்தர பிரதேசத்தில் உள்ள மஹோபா மாவட்டத்தில் இருந்து அவர் ரயிலில் ஏறியதோடு மது போதையில் தவறுதலாக சிறுநீர் கழித்து விட்டதாக கூறியிருக்கிறார். இதையடுத்து ரிதேஷ் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அபராதமும் விதித்தனர். அபராத தொகையை செலுத்திய பிறகு ரிதேஷ் விடுதலை செய்யப்படார்.
பாதிக்கப்பட்ட முதியவர் இது பற்றி கூறும் போது, இப்படி நடக்கும் என கனவில் கூட நாங்கள் நினைத்தது கிடையாது. ரயிலில் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்ற போது அதை நரகம் போல உணர்ந்தோம்" என்று வேதனையுடன் தெரிவித்தார். ஓடும் ரயிலில் பயணிகள் மீது இளைஞர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ரயில்களில் இனி தொடராமல் இருக்க உரிய நடவடிக்கையை ரயில்வே போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக இருந்தது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications