"நான் நலம்".. 5 நிமிடம் மட்டும் வழக்கறிஞரிடம் பேசிய சித்திக் கப்பான்..49 நாளாக சிறையில் வாடும் அவலம்
லக்னோ: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் சித்திக் கப்பான் இரண்டு மாதம் முன் கைது செய்யப்பட்டார். 49 நாட்களாக சிறையில் இருக்கும் இவர் தனது வழக்கறிஞரிடம் பேசுவதற்கு இன்று வெறும் 5 நிமிடம் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தை உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. ஹத்ராஸ் மாவட்டத்தில் இருக்கும் பூள்கார்கி கிராமத்தில் 20 வயது பட்டியலின பெண் உயர் சாதி ஆண்கள் 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு குறித்து செய்தி சேகரிக்க சென்ற கேரளாவை சேர்ந்த சித்திக் கப்பான் என்ற செய்தியாளர் உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். டெல்லியில் வசித்து வந்த இவர் டெல்லியில் இருக்கும் கேரளா பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.
49 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட சித்திக் கப்பான் இன்னும் சிறையில் இருக்கிறார். இவருக்கு பெயில் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது, ஆனால் இந்த வழக்கில் மத்திய மற்றும் உத்தர பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி கைது செய்யப்பட்ட இவர் மீது தேச விரோத வழக்கு, மத வன்முறையை தூண்டும் வழக்கு என்று பல பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது.
49 நாட்களாக சிறையில் வாடும் சித்திக் கப்பானை விடுவிக்க உச்ச நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் உத்தர பிரதேசத்தில் மதுரா கோர்ட்டில் சித்திக் கப்பானை விடுவிக்க இன்னொரு வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 49 நாட்களாக சிறையில் இருக்கும் சித்திக் கப்பான் இன்றுதான் தனது வழக்கறிஞரிடம் முதல் முறையாக பேசினார். தனது வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸிடம் இவர் 5 நிமிடம் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டார். தொலைபேசியில் சித்திக் கப்பான் வழக்கறிஞரிடம் பேசினார்.
நான் நலமாக இருக்கிறேன், உணவு கிடைக்கிறது, தேவையான மருந்துகள் கிடைக்கிறது என்று சித்திக் கப்பான் தனது வழக்கறிஞரிடம் குறிப்பிட்டுள்ளார். செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரை இப்படி சிறையில் அடைத்து வைத்து இருப்பதை நாடு முழுக்க இருக்கும் செய்தியாளர்கள் பலர் கடுமையான கண்டித்து உள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications