ஸ்மிரிதி இராணியின் இடதுகை.. ரிசல்ட் வந்த இரண்டே நாளில் உதவியாளர் சுட்டுக்கொலை.. அமேதியில் பகீர்!
அமேதி தொகுதி பாஜக எம்.பி ஸ்மிரிதி இராணியின் உதவியாளர் ஒருவர் நேற்று இரவு 11.30 மணிக்கு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் .
லக்னோ: அமேதி தொகுதி பாஜக எம்.பி ஸ்மிரிதி இராணியின் உதவியாளர் ஒருவர் நேற்று இரவு 11.30 மணிக்கு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் .
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமாக தோல்வி அடைந்து இருக்கிறது. மிக முக்கியமாக அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்துள்ளார்.
அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இராணி வெற்றிபெற்றுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய கலக்கத்தை தந்துள்ளது.

மிக மோசம்
இந்த நிலையில்தான் அமேதி தொகுதி பாஜக எம்.பி ஸ்மிரிதி இராணியின் உதவியாளர் சுரேந்திர சிங் நேற்று இரவு 11.30 மணிக்கு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாருலியா கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகே வைத்து இந்த கொலை நடந்துள்ளது. 2 பேர் சேர்ந்து சுரேந்திர சிங்கை துப்பாக்கியால் சுட்டதாக முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளது.

ஷூக்கள்
சுரேந்திர சிங் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். இவர் ஸ்மிரிதி இராணிக்கு மிகவும் நெருக்கமானவர். இவர்தான் ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் வகையில் அமேதியில் மக்களுக்கு ஷூக்களை வாங்கி பரிசளித்தார். ராகுல் அங்கு பிரச்சாரம் செய்ய வந்த போது, மக்களுக்கு சுரேந்திர சிங் ஷூக்களை இலவசமாக கொடுத்தார்.

பெரிய அதிர்ச்சி
இது காங்கிரஸ் கட்சியினருக்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது. இது தொடார்பாக பிரியங்கா காந்தியே நேரடியாக புகார் அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுரேந்திர சிங் மீது காங்கிரஸ் கட்சியினர் பலர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருந்தனர்.

மிக மோசம்
இந்த நிலையில்தான் சுரேந்திர சிங் கொலை செய்யப்பட்டு உள்ளார். சுரேந்திர சிங் கொலை அரசியல் தொடர்பான கொலை என்று பாஜக கூறியுள்ளது. இது தொடர்பாக விசாரிக்க அமேதி போலீசார் தனிப்படை அமைத்து இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்து இரண்டே நாளில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications