திரிணாமுல் காங். பிரதிநிதிகளை லக்னோ விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்த போலீஸ்.. பரபரப்பு
லக்னோ: என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது உத்தரப்பிரதேசத்தில் போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்க செல்லும் வழியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் குழுவினை லக்னோ விமான நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கலவரம்வெடித்தது. இந்த கலவரத்தின் போது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் .

இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுதற்காக தினேஷ் திரிவேதி, முகமது நதிமுல் ஹக், பிரதிமா மண்டல் மற்றும் அபிர் பிஸ்வாஸ் ஆகியோர் அடங்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரநிதிகள் இன்று லக்னோ வந்தது. அவர்களை விமான நிலையத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கூறியதாவது: "நாங்கள் விமானத்திலிருந்து இறங்கியவுடன் நாங்கள் காவல்துறையினரால் ஓடுதளத்திலேயே சுற்றி வளைக்கப்பட்டோம் நாங்கள் பஸ்ஸில் ஏறியபோது காவல்துறையினர் அனைவரையும் இறக்கி விட்டனர். எங்களை காவல்துறையினர் ஒரு ஒதுங்கிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர் ஓடுபாதை. நாங்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டோம்" என்றார்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications