உ.பியில் அடியோடு மாறும் பள்ளி கல்வி.. ஆசியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் தொடக்கம்! அசத்தும் யோகி அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசம் முழுவதும் இன்று முதல் டிசம்பர் மாதம் 10ம் தேதி வரை ஆசிரியர் பயிற்சி பிரசாரம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்களின் தரம் மேம்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி இன்று முதல் தொடங்குவதாக கூறியுள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கக்கல்வி ஆரிசரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் இன்று முதல் டிசம்பர் மாதம் 10ம் தேதி வரை பயிற்சி வழங்கப்படுகிறது. மொழி மற்றும் கணித பாடங்களில் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவே இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமல்லாது தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என்று மாநில அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு முறையும் இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. ஆனால் இந்த பயிற்சி வகுப்பானது முற்றிலும் வேறுபட்டதாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
அதன்படி பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களின் வெற்றிகளை பயிற்சி அளிப்பவர்கள் கேட்டறிய வேண்டும். ஆசியர்கள் கடந்து வந்த பாதைதான் வளமான குழந்தைகளை வளர்த்தெடுக்க உதவும். அப்படிப்பட்ட ஆசியர்களை கண்டெடுத்து அவர்களை கௌரவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி அதித்யநாத் பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications