உ.பி.யில் இரு சாதுக்கள் அடித்துக் கொலை.. கடவுளின் சித்தம் என கூறிய கஞ்சா ஆசாமி கைது
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலந்த்சாஹரில் உள்ள கோயிலில் இரு சாதுக்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புலந்த்சாஹர் மாவட்டத்தில் உள்ள அனுப்ஷாரில் உள்ள பகோனா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெகன்தாஸ் (55), ஷேர்தாஸ் (35). சாதுக்களான இவர்கள் இருவரும் அங்குள்ள கோயிலில் அடித்துக் கொல்லப்பட்டனர். ஜெகதீஷ் கடந்த 15 ஆண்டுகளாக கோயிலில் பணிபுரிந்து வந்தார். அது போல் ஷேர்தாஸும் 5 ஆண்டுகளாக கோயிலில் பணி செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அந்த கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற பொதுமக்கள் கோயிலில் இருவரின் சடலங்களை பார்த்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

திருட்டு
இதையடுத்து இது தொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாதுக்களிடம் இருந்த இடுக்கியை அந்த நபர் திருடிக் கொண்டு சென்றுள்ளார்.

கூர்மையான ஆயுதம்
அந்த இடுக்கியை திருப்பி தருமாறு அந்த நபரிடம் இரு சாதுக்களும் கேட்டுள்ளனர். அப்போது அந்த நபருக்கும் சாதுக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர் இருவரையும் அடித்தே கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து மிகவும் கூர்மையான ஆயுதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

கடவுளின் விருப்பம்
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் பகோனா கிராமத்தில் இரு சடலங்கள் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து இன்று காலை 5 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றோம். அப்போது முராரி என்ற நபர் அரை நிர்வாணமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அவரை பொதுமக்கள் சம்பவ இடத்திலிருந்து இரு கி.மீ. தூரத்தில் மடக்கி பிடித்தனர். அந்த நபரிடம் பேசிய போது அவர் கஞ்சாவை பயன்படுத்தியிருந்தார். மேலும் முதலில் ஏன் கொன்றாய் என கேட்டதற்கு இவர்களை கொல்வது கடவுளின் விருப்பம் என தெரிவித்தார்.

பரபரப்பு
கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் கிராமத்தில் சிறுநீரகத்தை திருட வந்தவர்கள் என நினைத்து சாதுக்கள் சுஷில் கிரி மகாராஷ், நிலேஷ் தெல்காடே உள்பட 3 பேர் அப்பகுதி மக்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இரு சாதுக்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications