Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி. சட்டசபை தேர்தல்: பிற்படுத்தப்பட்ட ஜாதி வாக்குகளை லம்ப்பா அள்ள அகிலேஷ் யாதவ் பக்கா ஸ்கெட்ச்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதி வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் மொத்தமாக அள்ளுவதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வியூகம் வகுத்து செயல்பட்டு வருவது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

உ.பி. சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி. தேர்தல் தொடர்பான இதுவரையிலான கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவே இருக்கின்றன. ஆனால் 2017-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் நிச்சயம் பாஜக 100 இடங்களை இழக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

பாஜகவைப் பொறுத்தவரையில் எடுத்த எடுப்பிலேயே 7 பிற்படுத்தப்பட்ட ஜாதி கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. பாஜகவின் இந்த கூட்டணி வியூகத்துக்கு பதிலடி தரும் வகையில்தான் மெகா கூட்டணியை உருவாக்கி இருக்கிறார் அகிலேஷ் யாதவ்.

மேற்கு உ.பி.- ஜாட்,முஸ்லிம்கள்

மேற்கு உ.பி.- ஜாட்,முஸ்லிம்கள்

ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் கட்சியுடன் (ஆர்.எல்.டி) கூட்டணி அமைத்திருக்கிறது சமாஜ்வாதி கட்சி. ஜாட், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் மேற்கு உ.பி.யில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆர்.எல்.டி. தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். குறிப்பாக விவசாயிகள் போராட்டமானது மேற்கு உ.பி.யில் பாஜகவுக்கு மிக கடுமையான சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு முன்னர் வரை மேற்கு உ.பி.யில் முசாபர் நகர் மத மோதல் போன்ற காரணங்களால் ஜாட், முஸ்லிம்கள் பிரிந்து நின்றனர். ஆனால் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஜாட்களையும் முஸ்லிம்களையும் கை கோர்க்க வைத்திருக்கிறது. இதனால்தான் ஆர்.எல்.டி.யுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் அகிலேஷ் யாதவ். 30 முதல் 35 தொகுதிகளை ஆர்.எல்.டி கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முன்வந்திருக்கிறார் அகிலேஷ் யாதவ்.

ராஜ்பார் வாக்குகள்

ராஜ்பார் வாக்குகள்

இதேபோல் கிழக்கு உ.பி.யில் ராஜ்பார் சமூக வாக்குகளை அறுவடை செய்வதற்கு ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி- எஸ்.பி.எஸ்.பியுடன் கை கோர்த்திருக்கிறார் அகிலேஷ் யாதவ். கடந்த தேர்தலில் கிழக்கு உ.பியில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 72 இடங்களை பாஜக வென்றது. இதற்கு காரணமே எஸ்.பி.எஸ்.பியுடனான பாஜகவின் கூட்டணிதான். முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த எஸ்.பி.எஸ்.பி கட்சி இப்போது பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் வேலை என அகிலேஷ் யாதவுடன் கை கோர்த்திருக்கிறது. மொத்தம் 150 தொகுதிகளில் எஸ்.பி.எஸ்.பி கட்சி தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.

சமாஜ்வாதி- ஆம் ஆத்மி கூட்டணி

சமாஜ்வாதி- ஆம் ஆத்மி கூட்டணி

அத்துடன் ராஜ்பார் சமூகத்தின் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவர்களான ராம் அச்சல் ராஜ்பார், கமலகாந்த் இருவரும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். இதுவும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணிக்கு கூடுதல் பலம் என சுட்டிக்காட்டப்படுகிறது. தற்போதைய நிலையில் அகிலேஷ் யாதவ் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியும் இணைய இருக்கிறது. இதுவரை தனித்து போட்டியிடுவோம் என கூறி வந்த ஆம் ஆத்மி கட்சி, கள யதார்த்தம் அகிலேஷ் யாதவுக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்தே கூட்டணிக்கு தயாராகிவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பாஜகவுக்கு நெருக்கடி

பாஜகவுக்கு நெருக்கடி

என்னதான் விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தாலும் பாஜக பக்கம், உ.பி. விவசாயிகள் அவ்வளவு எளிதாக சாய்ந்துவிடமாட்டார்கள் என்றே கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். ஓராண்டு கால போராட்டத்தின் மூலம் பெண்கள் மத்தியில் பாஜக மீது மிக மிக கடுமையான அதிருப்தி நிலவுகிறது; தற்போதைய சூழ்நிலையில் கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம்.. ஆனால் தேர்தல் நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறி அகிலேஷ் தலைமையிலான கூட்டணிக்கு சாதகமானாலும் ஆச்சரியம் இல்லை எனவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+