உ.பி. சட்டசபை தேர்தல்: பிற்படுத்தப்பட்ட ஜாதி வாக்குகளை லம்ப்பா அள்ள அகிலேஷ் யாதவ் பக்கா ஸ்கெட்ச்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதி வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் மொத்தமாக அள்ளுவதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வியூகம் வகுத்து செயல்பட்டு வருவது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
உ.பி. சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி. தேர்தல் தொடர்பான இதுவரையிலான கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவே இருக்கின்றன. ஆனால் 2017-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் நிச்சயம் பாஜக 100 இடங்களை இழக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பாஜகவைப் பொறுத்தவரையில் எடுத்த எடுப்பிலேயே 7 பிற்படுத்தப்பட்ட ஜாதி கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. பாஜகவின் இந்த கூட்டணி வியூகத்துக்கு பதிலடி தரும் வகையில்தான் மெகா கூட்டணியை உருவாக்கி இருக்கிறார் அகிலேஷ் யாதவ்.

மேற்கு உ.பி.- ஜாட்,முஸ்லிம்கள்
ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்டிரிய லோக் தளம் கட்சியுடன் (ஆர்.எல்.டி) கூட்டணி அமைத்திருக்கிறது சமாஜ்வாதி கட்சி. ஜாட், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் மேற்கு உ.பி.யில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆர்.எல்.டி. தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். குறிப்பாக விவசாயிகள் போராட்டமானது மேற்கு உ.பி.யில் பாஜகவுக்கு மிக கடுமையான சவாலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு முன்னர் வரை மேற்கு உ.பி.யில் முசாபர் நகர் மத மோதல் போன்ற காரணங்களால் ஜாட், முஸ்லிம்கள் பிரிந்து நின்றனர். ஆனால் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் ஜாட்களையும் முஸ்லிம்களையும் கை கோர்க்க வைத்திருக்கிறது. இதனால்தான் ஆர்.எல்.டி.யுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் அகிலேஷ் யாதவ். 30 முதல் 35 தொகுதிகளை ஆர்.எல்.டி கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய முன்வந்திருக்கிறார் அகிலேஷ் யாதவ்.

ராஜ்பார் வாக்குகள்
இதேபோல் கிழக்கு உ.பி.யில் ராஜ்பார் சமூக வாக்குகளை அறுவடை செய்வதற்கு ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி- எஸ்.பி.எஸ்.பியுடன் கை கோர்த்திருக்கிறார் அகிலேஷ் யாதவ். கடந்த தேர்தலில் கிழக்கு உ.பியில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 72 இடங்களை பாஜக வென்றது. இதற்கு காரணமே எஸ்.பி.எஸ்.பியுடனான பாஜகவின் கூட்டணிதான். முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த எஸ்.பி.எஸ்.பி கட்சி இப்போது பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் வேலை என அகிலேஷ் யாதவுடன் கை கோர்த்திருக்கிறது. மொத்தம் 150 தொகுதிகளில் எஸ்.பி.எஸ்.பி கட்சி தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.

சமாஜ்வாதி- ஆம் ஆத்மி கூட்டணி
அத்துடன் ராஜ்பார் சமூகத்தின் செல்வாக்கு பெற்ற அரசியல் தலைவர்களான ராம் அச்சல் ராஜ்பார், கமலகாந்த் இருவரும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். இதுவும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணிக்கு கூடுதல் பலம் என சுட்டிக்காட்டப்படுகிறது. தற்போதைய நிலையில் அகிலேஷ் யாதவ் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியும் இணைய இருக்கிறது. இதுவரை தனித்து போட்டியிடுவோம் என கூறி வந்த ஆம் ஆத்மி கட்சி, கள யதார்த்தம் அகிலேஷ் யாதவுக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்தே கூட்டணிக்கு தயாராகிவிட்டது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பாஜகவுக்கு நெருக்கடி
என்னதான் விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தாலும் பாஜக பக்கம், உ.பி. விவசாயிகள் அவ்வளவு எளிதாக சாய்ந்துவிடமாட்டார்கள் என்றே கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். ஓராண்டு கால போராட்டத்தின் மூலம் பெண்கள் மத்தியில் பாஜக மீது மிக மிக கடுமையான அதிருப்தி நிலவுகிறது; தற்போதைய சூழ்நிலையில் கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம்.. ஆனால் தேர்தல் நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறி அகிலேஷ் தலைமையிலான கூட்டணிக்கு சாதகமானாலும் ஆச்சரியம் இல்லை எனவும் கூறப்படுகிறது.
-
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
மோடி கைக்கு போன லிஸ்ட்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. மம்தாவுக்கு அதிர்ச்சி! -
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்?












Click it and Unblock the Notifications