நகர்ப்புற அமைப்புகளின் வளர்ச்சியை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள்! யோகி ஆதித்யநாத் புது யோசனை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சிறப்பாக செயல்படும் நகர்ப்புற அமைப்புகளுக்கு ஊக்கத் தொகை அளிக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் நகர்ப்புற அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது புதிய திட்டத்தையும் அறிவித்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக நகர்ப்புற அமைப்புகளின் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார். அதன்படி சிறப்பாக செயல்படும் முதல் 3 நகர்ப்புற அமைப்புகளுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்த உதவும் என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்த நகர்ப்புற அமைப்புகளின் தரவரிசை பல்வேறு அளவுருக்களைக் கருத்தில் கொண்டு, கண்காணிப்புக் குழுக்களால் நடத்தப்படும் விரிவான மதிப்பீடுகளின் மூலம் தீர்மானிக்கப்படும்.
முதலிடம் பிடிக்கும் நகர்ப்புற அமைப்புக்கு ரூ.2 கோடி, இரண்டாமிடத்திற்கு ரூ.1 கோடி, மூன்றாம் இடத்திற்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும். இது தவிர குறிப்பிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நகரங்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படும். கிராமப்புறங்களை மேம்படுத்துவதற்கு உ.பி அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. தேபோல இதனைத் தொடர்ந்து தற்போது நகர்ப்புறங்களை மேம்படுத்தவும் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications