உ.பி.: துப்பாக்கி உரிமம் பெற்ற பிராமணர்கள் குறித்த கணக்கெடுப்பு.. திடீரென பின்வாங்கிய அரசு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் எத்தனை பிராமணர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் பெற்றுள்ளார்கள், எத்தனை பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளார்கள் என கணக்கெடுக்க முதலில் உத்தரவிட்ட உத்தரப்பிரதேச அரசு பின்னர் அந்த உத்தரவிலிருந்து பின்வாங்கியது.
சுல்தான்பூர் மாவட்டம் லம்பா தொகுதியைச் சேர்ந்தவர் பாஜக எம்எல்ஏ தேவமணி திவிவேதி. இவர் கடந்த 16ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநில சட்டசபை முதன்மைச் செயலாளர் பிரதீப் துபேவிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் எத்தனை பிராமணர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்? எத்தனை கொலைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், எத்தனை குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்? பிராமணர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாநில அரசின் திட்டம் என்ன,முன்னுரிமை அடிப்படையில் பிராமணர்களுக்கு மாநில அரசு துப்பாக்கிக்கான உரிமத்தை வழங்குமா?
துப்பாக்கிக்கான உரிமம் கேட்டு எத்தனை பிராமணர்கள் விண்ணப்பித்துள்ளார்கள், அவர்களில் எத்தனை பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விகளை தேவமணி எழுப்பியிருந்தார். இதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில அரசு ஒரு கடிதம் எழுதியிருந்தது.
அதில் எத்தனை பிராமணர்கள் துப்பாக்கிக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள், அவர்களில் எத்தனை பேருக்கு உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அந்த கடிதத்தில் மாநில உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் பிரகாஷ் சந்திர அகர்வால் கையெழுத்திட்டிருந்தார்.
இதுகுறித்து முதன்மைச் செயலாளர் பிரதீப் துபேவிடம் இந்தியன் எக்ஸபிரஸ் செய்தி நிறுவனம் கேள்வி எழுப்புகையில், அது போன்ற எந்த ஒரு உத்தரவும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றார். அதுபோல் இந்த புகார் கடிதத்தை அளித்த திவிவேதியிடம் கேட்ட போது அதுகுறித்து எந்த தகவல்களும் தெரியாது என கூறிவிட்டார்.
இதுகுறித்து அகர்வாலிடம் கேட்ட போது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரியிடம் கேள்வி எழுப்புகையில் அவர் கணக்கெடுப்பு குறித்து உத்தரவிட்ட அரசே அந்த உத்தரவிலிருந்து பின்வாங்கிவிட்டதாக தெரிவித்தார். அது போன்ற தகவல்களை கேட்பது இனி தொடராது என்றும் அவர் தெரிவித்தார்.
-
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications