ரஷீத் கானாக மாறிய விகாஷ் குமார்.. ஷ்ரத்தா கொலையை ஆதரித்து வீடியோ! அம்பலப்படுத்திய உபி போலீஸ்
லக்னோ: ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை 35 துண்டுக்காக வெட்டி ஆப்தாப் கொலை செய்ததற்கு ரஷீத் கான் என்ற பெயரில் ஆதரவு தெரிவித்து பேசியவரை கைது செய்த உத்தரப்பிரதேச காவல்துறை அவரது உண்மை பெயர் விகாஷ் குமார் என தெரிவித்து உள்ளார்கள்.
டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் ஆப்தாப் பூனாவாலா பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவையே உலுக்கி இருக்கிறது.
டெல்லியில் ஒன்றாக வசித்து வந்த ஆப்தாப் பூனாவாலா - ஷ்ரத்தா வாக்கர் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு சச்சரவுகள் தொடர்ந்து இருக்கின்றன. ஆப்தாப் இதற்காக ஷ்ரத்தா வாக்கரை பல வகைகளில் துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஷ்ரத்தா
கடந்த மே மாதம் டெல்லியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஆப்தாப், ஷ்ரத்தாவை தாக்கி கொடூரமாக கொலை செய்து உள்ளதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. இதிலிருந்து தப்பிக்க ஷ்ரத்தாவின் உடலை ஆப்தாப் 35 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் வீசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஃப்ரிட்ஜில் உடல் பாகங்கள்
வீசப்படாமல் மீதம் இருந்த துண்டுகளில் இருந்து துர்நாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஃப்ரிட்ஜ் ஒன்றை எடுத்து வந்த ஆப்தாப் அதில் வைத்து பாதுகாத்து வந்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது. கடந்த 6 மாதங்களாக யாரிடமும் சிக்காமல் ஆப்தான் இருந்து வந்த நிலையில், ஷ்ரத்தாவின் தந்தை தனது மகளை காணவில்லை என புகாரளித்தார்.

ஆப்தாப் விளக்கம்
இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஆப்தாபை கைது செய்த போலீசாரிடம் அவர் தெரிவித்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தன. தற்போது ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கோபத்தில் என்ன செய்வதென்று அறியாமல் ஷ்ரத்தாவை கொன்றுவிட்டேன் என ஆப்தாப் தெரிவித்துள்ளார்.

2 ஆண்டுக்கு முன்பே புகார்
இதற்கிடையே ஆப்தாப் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஷ்ரத்தா மகாராஷ்டிரா மாநிலம் துலிஞ்ச் காவல்நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார். அதில், "இன்று அவன் என்னை கொலை செய்ய முயற்சி செய்தான். கொலை செய்துவிடுவேன் என மிரட்டினான்.

கொலை மிரட்டல்
பல துண்டுகளாக வெட்டி வீசிவிடுவேன் என்று கூறினான். கடந்த 6 மாதம் முன்பாகவும் அவன் இதேபோல் என்னை தாக்கினான். ஆனால், அப்போது எனக்கு காவல் நிலையம் வந்து புகார் கொடுப்பதற்கான தைரியமே இல்லை. அவன் என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததால் நான் அஞ்சினேன்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆதரித்து வீடியோ
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாவில், ரஷீத் கான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஷ்ரத்தா வாக்கர் கொலையை நியாயப்படுத்தும் வகையில் அதை ஆதரித்து பேசிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

விகாஷ் குமார்
இந்த நிலையில் புலந்த்ஷா போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை பெயர் ரஷீத் கான் இல்லை என்றும், விகாஷ் குமார் என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விகாஷ் குமார் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications