பச்சையா இருந்தாலே பாகிஸ்தான்னு அர்த்தமா? சவுதி கொடியை காலில் போட்டு மிதித்த கும்பல்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பல் ஒன்று அந்நாட்டின் கொடியை ரோட்டில் போட்டு காலால் மிதித்தது. ஆனால் பாகிஸ்தான் கொடியுடன் சவுதி கொடியும் இருந்ததால் இது சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானை சீண்டியது. பதிலுக்கு பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியாவில் பல இடங்களிலிருந்தும் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. இந்தியாவுக்கு ஆதரவாக பேரணிகளும் ஆதரவு கூட்டங்களும் நடைபெற்றன. சிலர் கொஞ்சம் ஓவராக போய், பாகிஸ்தான் கொடியை அவமதித்தனர்.

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதில், பாகிஸ்தான் கொடியுடன் சேர்த்து சவுதி அரேபியா நாட்டின் கொடியையும் சிலர் காலில் போட்டு மிதித்துள்ளனர். இத்துடன் இஸ்லாமியர்களின் புதின வாக்கியங்கள் அடங்கிய பிரின்ட் அவுட் பேப்பரையும் மிதித்துள்ளனர். பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு இந்திய முஸ்லீம்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் சவுதியுடன் நமக்கு எந்த பஞ்சாயத்தும் இல்லை. அதே நேரம், இஸ்லாம் மதம் மீதும் நமக்கு வெறுப்பு கிடையாது.
ஆனால் பாகிஸ்தானை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு சவுதி கொடியையும், இஸ்லாத்தின் புனித வரியையும் கும்பல் ஒன்று அவமதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த இஸ்லாமியர்கள் கும்பலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
"நாங்கள் இங்கு காலங்காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். பாகிஸ்தான் மீது எங்களுக்கும் கோபம் இருக்கிறது. ஆனால் அதற்காக ஒட்டுமொத்த இஸ்லாம் மதத்தை அவமதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த ஏப்.22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றது. இது லக்ஷர் இ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் கிளையாகும். இதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவி செய்து வருகிறது. எனவே பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் தாக்குதலை தொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications