Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பச்சையா இருந்தாலே பாகிஸ்தான்னு அர்த்தமா? சவுதி கொடியை காலில் போட்டு மிதித்த கும்பல்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பல் ஒன்று அந்நாட்டின் கொடியை ரோட்டில் போட்டு காலால் மிதித்தது. ஆனால் பாகிஸ்தான் கொடியுடன் சவுதி கொடியும் இருந்ததால் இது சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானை சீண்டியது. பதிலுக்கு பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியாவில் பல இடங்களிலிருந்தும் பாகிஸ்தானுக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. இந்தியாவுக்கு ஆதரவாக பேரணிகளும் ஆதரவு கூட்டங்களும் நடைபெற்றன. சிலர் கொஞ்சம் ஓவராக போய், பாகிஸ்தான் கொடியை அவமதித்தனர்.

Pakistan Uttar Pradesh Saudi

உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அதில், பாகிஸ்தான் கொடியுடன் சேர்த்து சவுதி அரேபியா நாட்டின் கொடியையும் சிலர் காலில் போட்டு மிதித்துள்ளனர். இத்துடன் இஸ்லாமியர்களின் புதின வாக்கியங்கள் அடங்கிய பிரின்ட் அவுட் பேப்பரையும் மிதித்துள்ளனர். பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு இந்திய முஸ்லீம்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் சவுதியுடன் நமக்கு எந்த பஞ்சாயத்தும் இல்லை. அதே நேரம், இஸ்லாம் மதம் மீதும் நமக்கு வெறுப்பு கிடையாது.

ஆனால் பாகிஸ்தானை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு சவுதி கொடியையும், இஸ்லாத்தின் புனித வரியையும் கும்பல் ஒன்று அவமதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த இஸ்லாமியர்கள் கும்பலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

"நாங்கள் இங்கு காலங்காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். பாகிஸ்தான் மீது எங்களுக்கும் கோபம் இருக்கிறது. ஆனால் அதற்காக ஒட்டுமொத்த இஸ்லாம் மதத்தை அவமதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த ஏப்.22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு தி ரெசிஸ்டன்ட் பிரன்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றது. இது லக்ஷர் இ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் கிளையாகும். இதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உதவி செய்து வருகிறது. எனவே பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் தாக்குதலை தொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+