Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அகிலேஷ் யாதவ் ஆட்சியில் மாஃபியாக்கள் சுதந்திரமாக வலம் வந்தனர்: பிரதமர் மோடி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி ஆட்சியில்தான் மாஃபியாக்கள் சுதந்திரமாக நடமாடினர்; ஆனால் பாஜக ஆட்சியில் மாஃபியாக்கள் ஒழித்து கட்டப்பட்டனர் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

403 தொகுதிகள் கொண்ட உ.பி. சட்டசபைக்கு 3 கட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டங்களாக மார்ச் 7 வரை தேர்தல் நடைபெற உள்ளது.

உ.பி.யின் ஹர்தோய் என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உத்தரப்பிரதேச மாநில மக்கள் 2 முறை ஹோலி பண்டிகை கொண்டாட தயாராகி கொள்ளுங்கள். முதலாவது ஹோலி பண்டிகை மார்ச் 10-ந் தேதி பாஜகவின் வெற்றியை கொண்டாடுவதாகும். மார்ச் 10-ல் ஹோலி கொண்டாட விரும்பினால் வாக்கு சாவடிகளில் கொண்டாடுங்கள்.

சமாஜ்வாதியின் முட்டுக்கட்டை

சமாஜ்வாதியின் முட்டுக்கட்டை

2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை பரிவார்வாதிகள் எங்களை ஆதரிக்கவில்லை. நான் உ.பி. மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக இருக்கிறேன். ஆனால் இதுவரை மக்களுக்கான பணிகளை என்னை செய்யவிடவில்லை. அப்படியானவர்களை மீண்டும் தேர்ந்தெடுத்து அரியாசனத்தில் அமர வைக்கப் போகிறீர்கள்?

ஜாதி, குடும்ப அரசியல்

ஜாதி, குடும்ப அரசியல்

இந்த பரிவார்வாதிகள்தான் ஜாதியத்தை கையில் எடுத்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய பரிவார்வாதிகள்தான் நாற்காலிக்காக, அதிகாரத்துக்காக சொந்த குடும்பத்துக்குளேயே சண்டை போட்டுக் கொள்கின்றனர். நீங்கள் தேர்ந்தெடுத்து ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு எந்த ஒரு குடும்பத்தினருக்கும் சாதகமாக செயல்படவில்லை. மத்திய அரசும் மாநில அரசும் குடும்ப அரசியலை அனுமதிக்காது.

மீண்டும் மாஃபியாக்கள்?

மீண்டும் மாஃபியாக்கள்?

அகிலேஷ் யாதவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் மாஃபியாக்கள் சர்வ சுதந்திரமாக நடமாடி வந்தனர். ஆனால் பாஜக ஆட்சியில் மாஃபியாக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினால் மீண்டும் மாஃபியாக்கள் தலையெடுத்துவிடுவார்கள். அதை அனுமதிக்க போகிறீர்களா? இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

யோகி அட்டாக்

யோகி அட்டாக்

இதேபோல் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி ஒருவரின் தந்தை சமாஜ்வாதி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவருக்காக பிரசாரம் செய்கிறார்கள். இதுவரை அகிலேஷ் யாதவ் இதுபற்றி வாயே திறக்கவில்லை. பயங்கரவாதிகள் மீது உங்களுக்கு என்ன கரிசனை என கேள்வி எழுப்பினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+