‛வாட்ஸ்சப் சேனல்’.. மக்களின் குறைகளை தீர்க்க புதிய வழி.. மாற்றி யோசிக்கும் யோகி ஆதித்யநாத்! பின்னணி
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மக்களின் குறைகளை உடனடியாக அறிந்து அதனை சரிசெய்ய வாட்ஸ் அப்பில் சேனல் தொடங்கி உள்ளார். இதன்மூலம் மக்களுடன் அவர் நேரடியாக தொடர்பில் இருப்பதோடு, வரும் நாட்களின் குறைகளை உடனே சரிசெய்ய திட்டமிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு யோகி ஆதித்யநாத் 2வது முறையாக முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். தற்போதைய சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

அதோடு ஒவ்வொரு கட்சிகளும் சமூக வலைதளங்களில் தங்களுக்கென புதிய பக்கங்களை திறந்து அரசு மற்றும் கட்சியின் செயல்பாடு மற்றும் அதன் தினசரி செயல்பாடுகள் குறித்த விபரங்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு உத்தர பிரதேச மாநிலத்தை ஆட்சி செய்யும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசும் விதவிலக்கல்ல.
அந்த வகையில் தான் தற்போது யோகி ஆதித்யநாத் அரசு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதாவது முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் அனைத்து தரப்பு மக்களும் நேரடியாக தங்களுக்கான குறைகளை வீட்டில் இருந்தபடியே தெரிவிக்கும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக புதிதாக வாட்ஸ்அப்பில் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
அதாவது முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம் பெயரில் இந்த வாட்ஸ்அப் சேனல் உருவக்கப்பட்டுள்ளது. 'உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகம்' என்ற புதிய வாட்ஸ்அப் சேனலில் மக்கள் தங்களின் குறைகளை பதிவிட்டால் அதிகாரிகள் மூலம் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், ‛‛முதல்வரை தொடர்பு கொள்ள மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவில் இந்த வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தர பிரதேச மாநில முதல்வர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில், ‛‛மாநிலத்தில் உள்ள 25 கோடி மக்களும் ஒரே குடும்பம் தான். இந்த குடும்பத்தில் வாழும் ஒவ்வொருவரின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவேன். முதல்வரிடம் எளிதாக பேச வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications