Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 நாள் யாகம்.. 37 வருடங்களில் இல்லாத "சுனாமி".. உ.பியில் வரலாறு படைத்த யோகி.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கிறார் யோகி ஆதித்யநாத். அங்கு சாத்தியமே இல்லை என்று கூறப்பட்டு வந்த ஒரு விஷயத்தை யோகி ஆதித்யநாத் சாத்தியப்படுத்தி உள்ளார்.

Recommended Video

    UP Election Result | இதுவரை நடந்ததே இல்லை.. பாஜக-வுக்கு வரலாற்று வெற்றியை பெற்று கொடுத்த யோகி ஆதித்யநாத்

    உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டு இருக்கிறது. 403 இடங்களில், 250 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

    சமாஜ்வாதி கட்சியோ 118 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தலா 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

    உத்தர பிரதேசம்

    உத்தர பிரதேசம்

    உத்தர பிரதேச வரலாற்றை எடுத்துக்கொண்டால் அங்கு 1985க்கு பிறகு எந்த கட்சியும் 5 வருடம் ஆட்சி செய்த பின் மீண்டும் ஆட்சிக்கு வந்ததே கிடையாது. 1985க்கு பின் சோனியா காந்தி, வாஜ்பாய், அத்வானி, முலாயம் சிங் யாதவ், மாயாவதி என்ற எந்த பெரும் தலைவர்களாலும் தங்கள் கட்சியை மீண்டும் வெற்றிபெற வைக்க முடியவில்லை. 1985க்கு முன் காங்கிரஸ் பல முறை உத்தர பிரதேசத்தில் அடுத்தடுத்து வென்று இருக்கிறது.

    காங்கிரஸ் வெற்றி

    காங்கிரஸ் வெற்றி

    உத்தர பிரதேசத்தில் சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் வரிசையாக 4 முறை ஆட்சி புரிந்து இருக்கிறது. பாரதிய கிரந்தி தளம் கட்சியும் உத்தர பிரதேசத்தில் பலமுறை வென்றுள்ளது. ஆனால் அங்கு பாஜக கால் பதிக்கவே 30 வருடங்கள் ஆனது. உத்தர பிரதேசத்தில் பாஜக 1977ல்தான் முதல்முறை வென்றது. பின்னர் மீண்டும் 1991ல்தான் பாஜக அங்கு மீண்டும் வென்றது. இடைப்பட்ட காலத்தில் 1982 முதல் 1989 வரை காங்கிரஸ் இரண்டு முறை தொடர்ந்து அங்கு ஆட்சி புரிந்தது. அந்த அளவிற்கு அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இருந்த நிலையில் இந்த முறை 4 இடங்களை பிடிக்க கூட முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது.

    1985

    1985

    1991ல் அங்கு வென்ற பாஜக அதன்பின் மீண்டும் உத்தர பிரதேசத்தில் இடம் பிடிக்க பாஜக கடுமையாக போராடியது. 1991க்கு பின் பல வருடங்கள் கழித்து மீண்டும் 2017ல்தான் உத்தர பிரதேசத்தில் பாஜக வென்றது. இப்போது மீண்டும் தொடர்ச்சியாக இரண்டாவது முறை உத்தர பிரதேசத்தை கைப்பற்றும் வாய்ப்பு பாஜகவிற்கு கிடைத்துள்ளது. 1985க்கு பின் உத்தர பிரதேசத்தில் எந்த ஒரு கட்சியும் இரண்டுமுறை வென்றது இல்லை. அதற்கு முன் கட்சிகள் இரண்டு, மூன்று முறை தொடர்ச்சியாக வென்று இருந்தாலும் 1985க்கு பின் 37 வருடங்களாக உத்தர பிரதேச மக்கள் கட்சிகளை மாறி மாறித்தான் ஆட்சியில் அமர வைத்து இருக்கின்றனர்.

    சாதனை

    சாதனை

    காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் 1985க்கு முன்பாவது அடுத்தடுத்து உத்தர பிரதேசத்தில் வென்றது. ஆனால் பாஜக ஒருமுறை கூட இங்கு அடுத்தடுத்து ஆட்சியை கைப்பற்றியது கிடையாது, இந்த முறை அந்த வரலாற்றை முறியடித்து உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் என்னும் அரசியல் சுனாமி மீண்டும் அங்கு முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். 37 வருட வரலாற்றை பாஜக மாற்றி அமைகிறது. யோகி, மோடி, அமித் ஷா என்ற மூன்று பெரும் தலைவர்களின் அரசியல் வியூகம் பாஜகவிற்கு இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

     கடைசி கட்ட தேர்தல்

    கடைசி கட்ட தேர்தல்

    உத்தர பிரதேசத்தில் 7ம் கட்ட தேர்தலுக்கு பின் முதல்வர் ஆதித்யநாத் வெளியே வரவே இல்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியான போதும் கூட அவர் வெளியே வரவே இல்லை. கோரக்பூரில் இருக்கும் மடம் ஒன்றில் தங்கி தீவிரமாக அவர் தியானம், யாகம் ஆகியவற்றை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் வேண்டியது போலவே பாஜக மிகப்பெரிய இமாலய வெற்றியை பாஜக அங்கு ருசித்து உள்ளது. பாஜக உ.பியை இரண்டாவது முறைக்கு வெல்வது சாத்தியமே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் யோகி ஆதித்யநாத் அதை சாத்தியப்படுத்தி உள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+