உ.பி தேர்தல்: ஆதித்யநாத் vs அகிலேஷ்.. எந்த கட்சிக்கு அதிக வெற்றிவாய்ப்பு? ஏபிபி சி வோட்டர் சர்வே!
லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 45.3 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சேனல் - சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் மக்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பாஜக, சமாஜ் வாதி, பகுஜன் சமாதி, காங்கிரஸ் என்ற மிகப்பெரிய நான்கு முனை போட்டி அங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி, ராஷ்டிரிய லோக் தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முக்கிய கேம் சேஞ்சர்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் உத்தர பிரதேச தேர்தல் குறித்தும் அங்கு யாருக்கு அதிக வெற்றிவாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஏபிபி சேனல் - சி வோட்டர் கருத்து கணிப்பு நடத்தி உள்ளது.

கருத்து கணிப்பு
இந்த கருத்து கணிப்பில் புதிய அரசு உத்தர பிரதேசத்தில் அமைய வேண்டுமா என்ற கேள்விக்கு 48.3 சதவிகிதம் பேர் ஆதித்யநாத் அரசு மீது கோபத்தில் இருப்பதாகவும், ஆட்சியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. 27.5 சதவிகிதம் பேர் ஆட்சி மீது கோபத்தில் இருக்கிறோம். ஆனால் மாற்றம் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

ஆதித்யநாத் அரசு
24.2 சதவிகிதம் பேர் ஆட்சி மீது கோபத்தில் இல்லை. இதனால் ஆட்சி மாற்றம் தேவை இல்லை என்று கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பேர் ஆட்சி மீது கோபமாக இருப்பதாகவும் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றும் கூறி உள்ளதாலும் பாஜகவிற்கு இது கொஞ்சம் நெகட்டிவ் சிக்னலாக பார்க்கப்படுகிறது.

வெற்றி வாய்ப்பு
ஆனால் இதற்கு எப்படி எதிராக எந்த கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்பு கொண்டுள்ளது என்ற கேள்விக்கு பாஜகவிற்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது என்று மக்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி பாஜக கூட்டணிக்கு 45.3 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். சமாஜ் வாதி கட்சிக்கு 29.8 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் பார்ட்டிக்கு 8.1 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சிக்கு 8 சதவிகிதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். 3.3 சதவிகிதம் பேர் மற்ற கட்சிகளுக்கும், 2.7 சதவிகிதம் பேர் தொங்கு சட்டசபை உருவாகும் என்றும் கணித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிக கவனத்தை உண்டாக்கும் பிரச்சனை எது என்ற கேள்விக்கு 26.9 சதவிகிதம் விவசாய போராட்டம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர். ஜாதி, மத பிரச்சனைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று 16.1 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.

கொரோனா
கொரோனாவை கட்டுப்படுத்த தவறியது 15.2 சதவிகித பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ரவுடிகளை ஒழிக்க தவறிய பிரச்சனை 13.5 சதவிகித பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் இமேஜ் தேர்தலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று 6.1 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். மாநில அரசின் பொருளாதார நிலை 3.3 சதவிகிதம் பங்களிப்பை தேர்தலில் ஏற்படுத்தும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications