சுகாதாரத்தில் முந்தும் உத்தரப் பிரதேசம்! முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் சிறப்பு திட்டம் தொடக்கம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் தூய்மையை மேலும் சிறப்பாக பராமரிக்க 'தூய்மை இந்தியா திட்டத்தை' பலப்படுத்தும் பணியில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு ஈடுபட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் மூலம் குப்பைகள் இல்லாத கிராமபுறங்களை சாத்தியமாக்கிட மாநில அரசு விரும்புகிறது. இதற்காக விரிவான செயல் திட்டத்தையும் முன்மொழிந்துள்ளது. அதன்படி சுமார் ஒரு லட்சம் ஊழியர்களுக்கு கிராமங்களில் தூய்மை மற்றும் துப்புரவுப் பயிற்சிகளை மேற்கொள்ள பயிற்சியளிக்கப்படும். இவர்களை கண்காணிக்க நிர்வாகிகளும் நியமிக்கப்படுவார்கள். இந்த செயல் திட்டத்தின் உண்மையான நோக்கம் குப்பைகளை அகற்றுவது மட்டுமல்ல.

மாறாக, குப்பைகளை எப்படி சரியான முறையில் அப்புறப்படுத்துவது என்பதுதான். இதைத் தொடர்ந்து கழிவறைகளை கட்டுவதிலும் மாநில அரசு தீவிர முனைப்ப காட்டி வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "மாநிலத்தின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் எந்த அளவுக்கு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். இதே போலதான் தூய்மையும் மாநிலத்திற்கு அவசியமான மற்றொரு விஷயம். தூய்மை இல்லையெனில் அங்கு எதுவும் சிறந்து விளங்காது.
எனவே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசு தூய்மை இந்தியா திட்டத்தை சாத்தியப்படுத்திட தீவிரமாக முயன்று வருகிறது. முதற்கட்டமாக மாநிலத்தில் மொத்தம் 2.16 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. அதேபோல அனைத்து கிராமங்களிலும் திட மற்றும் திரவ கழிவுகளை திறம்பட மேலாண்மை செய்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திறந்தவெளியில் மலம் கழிப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது இது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications