சப்பாத்தியுடன் உப்பையே ஏற்றுக் கொள்ளமுடியாது.. இதில் உ.பி. அரசு செய்த மற்றொரு வேலையை பாருங்க!
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மிர்சாபூரில் ஒரு பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சப்பாத்திக்கு தொட்டு கொள்ள உப்பு வழங்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்த நிலையில் அந்த சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் வெள்ளை சாதத்துக்கு உப்பு பரிமாறப்பட்டதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மிர்சாபூரில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவு திட்டம் சரிவர வழங்குவதில்லை என்ற புகார்கள் இருந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அந்த பள்ளியில் மதிய உணவு வேளையில் சப்பாத்தி பரிமாறப்பட்டது.
அதற்கு தொட்டுக் கொள்ள குருமா, சாம்பார், சட்டினி, பருப்பு ஆகியவற்றுக்கு பதில் வெறும் உப்பு வழங்கப்பட்டது. இதையும் அந்த ஏழை மாணவர்கள் வேறு வழியில்லாமல் சாப்பிட்ட அவலத்தை பத்திரிகையாளர் ஜெய்ஸ்வால் படம் பிடித்தார்.

வழக்கு பதிவு
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே பத்திரிகையாளர் ஜெய்ஷ்வால் மற்றும் ராஜ்குமார் பால் மீது அரசு வழக்கு பதிவு செய்தது.

உப்பு பரிமாற்றம்
இந்த நிலையில் அந்த பள்ளியில் சத்துணவில் சமையல்காரராக பணியாற்றும் ருக்மணி தேவி கூறுகையில் சப்பாத்தியுடன் உப்பு பரிமாறப்பட்டதற்கு முன் வாரம் சாதத்துக்கு தொட்டு கொள்ள சாம்பார், தயிர், ரசம், பருப்பு ஆகியவற்றுக்கு பதிலாக உப்பு பரிமாறப்பட்டது.

சாதம், உப்பு
உடனே பள்ளித் தலைமை ஆசிரியரிடம் சென்று உணவு பொருட்கள் இருப்பு இல்லை. அதனால் மாணவர்களுக்கு சாதமும் உப்பும் வழங்கப்பட்டது என கூறினேன். இது வெளியே தெரிந்தால் பிரச்சினையாகிவிடும் என்றேன்.

நம்ப மாட்டார்கள்
அதற்கு அவரோ சாதத்துக்கு உப்பு வழங்கினார்கள் என குழந்தைகள் கூறினாலும் அதை அவரது பெற்றோரோ மற்றவர்களோ நம்ப மாட்டார்கள் என கூறி என் வாயை அடைத்தார் என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications